உயிர் இருப்பது வீழாது ...

சாமானிய டைரி 4:

திருமணமான அந்தத் தோழி பல மாதங்களுக்குப் பின் என்னை அழைத்தாள். "நேற்று எதிர்பாராத நேரத்தில், முன்பின் அறிமுகமில்லாதவரிடமிருந்து ஒரு பாராட்டுக் கிடைத்தது. இப்போதுவரை அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

சுய சிந்தனையுடைய பெண் அவள், அவளே தொடர்ந்தால் "சின்ன அங்கீகாரம் கூட இவ்ளோ சந்தோச்சம் கொடுக்குது ... ஏன் தெரியுமா?. நம்ம குடும்ப அமைப்பு, பாராட்டு நிறைந்ததாவும், மகிழ்ச்சி கொடுப்பதாவும் இல்ல."

பின் கொஞ்சம் புலம்பினாள், "நான் என் சுயத்தை இழக்காம இருப்பதே ஒரு போரட்டமா இருக்கு. 25 வயசுக்குள்ள நம்ம வாழ்க்கை முடிஞ்சிட்டா என்ன"

இந்தியக் குடும்பங்கள் அழியுதேனு பலரும் பேசராங்க. தினமும் எத்தனையோ செய்திகள் படிக்குறோம். "அதுக்குள்ள என்ன உயிர் இருக்கு? உயிர் இல்லாவிட்டால் அது அழியத்தான செய்யும்?"

சக மனிதர்கள், நேசத்தை பரஸ்பரம் வெளிப்படுத்தும் இடமாக இல்லாத குடும்பம், ஒருவர் மீது இன்னொருவர் ஆதிக்கம் செலுத்தும் இடமாக இருப்பது அதன் பலவீனம்.

அவள் ஆதிக்கத்தின் பால் வெறுப்புற்றிருந்தாள், திணிக்கப்பட்ட கடமைகளை வெறுத்தாள், இந்த நிலையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கைதான் அவளுக்கு உயிராக இருந்தது.

உயிர் இருக்கிற எதுவும் வீழாது ...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels