இவ்ளோ பெரிய கோழியா?


இவ்ளோ பெரிய கோழியா?

இந்தப் படத்தைப் பார்த்ததும் பலருக்கும் இந்தக் கேள்வி தான் தோன்றும். ஆஸ்திரேலிய சிற்பக் கலைஞர் ரான் மியூஸ்க்கின் சிற்ப வேலைப்பாடுதான் இது.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஜெர்மானியர்களுக்கு பிறந்த இந்தக் கலைஞர் 1996 ஆண்டில் தனது 38 வது வயதில் - பைன் ஆர்ட் துறையில் நுழைந்தார். கற்பனை வடிவங்களைத்தான் சிலை செதுக்க முடியும் என்ற காலத்தில், உயிரோட்டமான மனித உடல்களை சிலை வடித்து புகழ்பெற்றவர்.

சிலைகள் ஒவ்வொன்றிலும் - மனிதர்களின் பயம், துக்கம், அதிர்ச்சி, தனிமை, தூக்கம் என விதவிதமான உணர்வுகள் சிறைப்பட்டிருக்கின்றன. பார்க்கப் பார்க்க பிரம்மிப்பாக இருந்தது. 

இந்தியாவை நினைத்துக் கொண்டேன். நம்மிடம் ஏராளமான சிற்பக் கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் ஏட்டுக் கல்வி வாய்ப்பு என்ற நிலை பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்ததன் காரணமாக - அந்த அறிவெல்லாம் சேகரமாகாமல் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

திருப்பூரை அடுத்த திருமுருகன் பூண்டியில் சிற்பக் கலைஞர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் கேட்பதெல்லாம் ஒரு சிற்பக் கல்லூரி - கலைஞர்களுக்கான அங்கீகாரம் - திறனுள்ள கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரமும், நவீனங்களின் அறிமுகமும் கிடைக்க வேண்டும். இனியாவது கொடுப்போம் ...









0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels