Showing posts with label குடிநீர். Show all posts
Showing posts with label குடிநீர். Show all posts

லாரியோடு வரும் குழாய்ச் சண்டை ...

சாமானிய டைரி 1:

குழாயில் குடிநீர் வரும் வசதியுள்ள எங்கள் பகுதியில் இன்று ஒரு லாரி வந்திருந்தது. "இப்பவே, லாரில தண்ணி பிடிக்க வேண்டிய நிலை ஆகிடுச்சே" என்ற புலம்பல்கள் கேட்டன.

அவசரம் எல்லோரது கண்களிலும். பெரும்பாலான பெண்கள் அருகில் உள்ள பனியன் கம்பனியில் வேலை செய்கிறவர்கள்.

நீலவண்ண தண்ணீர் தொட்டிக்கு முன் வரிசையில் நின்றபடி குடங்களோடு காத்திருந்தார்கள். தண்ணீர் விநியோகம் தொடங்கியதும், சலசலப்பு அடங்கியது. அவரவர் வீடுகளுக்கு சென்று தண்ணீர் குடத்தை வைத்துவிட்டு, அடுத்த முறைக்காக மீண்டும் வரிசையில் நின்றார்கள்.எல்லோருக்கும் இரண்டு நடை தண்ணீர் கிடைக்கவிலை.

அவரவருக்கு கிடைத்த தண்ணீரோடு திருப்திப் பட்டுக்கொள்ள முடியாது. தண்ணீர் அத்தியாவிசயமாகிற்றே.

லாரி சிரியது, வரிசையில் நின்றவர்கள் அதிகம். ஏமாற்றத்தோடு திரும்பியவர்களில் சிலர் கவுன்சிலருக்கு அழைத்திருக்க வேண்டும். ஆனால், லாரி மீண்டும் வரவில்லை.

அடுத்தமுறை லாரியோடு வாய்ச் சண்டையும் வரலாம். பற்றாக்குறை அதைத்தான் உணர்த்தியது.

நீர் நம் உயிர் ...

மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்த முழக்கங்களில் ஒன்று குடிநீரை அரசாங்கம் விற்பனை செய்கிறது என்பதாகும்.

இன்று தோழர் லீலாவதி நினைவுதினம். தண்ணீர் வியாபாரிகளுக்கும் பிற சமூக விரோதிகளுக்கும் எதிராக களத்தில் போராடியவர். அவரை கொடூரமாக படுகொலை செய்த வழக்கில் கைதான திமுகவினர் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

குடிநீரை வியாபாரப் பொருளாக்குவது சர்வதேச நிதியத்தின் திட்டங்களில் ஒன்று. உலகமயக் கொள்கைகளை விசுவாசத்தோடு கடைபிடிக்கும் திமுக, அதிமுக ஆட்சிகளில் நமது நீராதாரங்கள் சீரழிக்கப்பட்டன.

 அதன் காரணமாக குடிநீர் ஒரு விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டது. இந்தியாவிலேயே "திருப்பூர் 3 வது குடிநீர் திட்டம்" மட்டும் தனியாரால் நிறைவேற்றப்படும் குடிநீர் திட்டம். குடிநீர் வடிகால் வாரியம் 4 ரூபாய்க்கு கொடுக்கும் தண்ணீரை இந்த நிறுவனம் 26 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை திமுகவும் ஊக்குவித்தது.

எல்லா மெட்ரோ நகரங்களிலும் குடிநீர் விற்பனை தொடர்கிறது. இது அதிகரித்தும் வருகிறது. இந்த நிலை மாற்ற வேண்டுமானால், நமது நீராதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், மணல் கொள்ளை உள்ளிட்ட கனிம சுரண்டல் தடுக்கப்பட வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு சுற்றுச் சூழல் விதிகளை கடுமையாக அமலாக்க வேண்டும். அரசு இலவசமாக வழங்கும் குடிநீரின் தரத்தை அதிகரிக்க வேண்டும். மாறாக, தண்ணீர் பாட்டில் விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல். அரசே குறைந்த விலை குடிநீரை கொடுப்பதென்பது தற்காலிக ஏற்பாடுதான்.

தேர்தலுக்கு பின்னர் குடிநீர் உரிமையை பாதுகாக்கவும், மக்களுக்கு இலவசமாக சுத்திகரித்த நீர் கிடைக்கவும் திமுக போராடுமா?. ஸ்டாலினுக்கு அப்படிப்பட்ட உறுதி இருக்கிறதா?. இல்லை என்றே படுகிறது. அவரைப் பொருத்தமட்டில் இதுவொரு தேர்தல் ஆயுதம். மக்களுக்கு வாழ்க்கைப் போராட்டம்.

#Stalin I #DMK I #Water I #LPG I Sindhan Ra I #Privatisation

Labels