நீர் நம் உயிர் ...

மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்த முழக்கங்களில் ஒன்று குடிநீரை அரசாங்கம் விற்பனை செய்கிறது என்பதாகும்.

இன்று தோழர் லீலாவதி நினைவுதினம். தண்ணீர் வியாபாரிகளுக்கும் பிற சமூக விரோதிகளுக்கும் எதிராக களத்தில் போராடியவர். அவரை கொடூரமாக படுகொலை செய்த வழக்கில் கைதான திமுகவினர் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

குடிநீரை வியாபாரப் பொருளாக்குவது சர்வதேச நிதியத்தின் திட்டங்களில் ஒன்று. உலகமயக் கொள்கைகளை விசுவாசத்தோடு கடைபிடிக்கும் திமுக, அதிமுக ஆட்சிகளில் நமது நீராதாரங்கள் சீரழிக்கப்பட்டன.

 அதன் காரணமாக குடிநீர் ஒரு விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டது. இந்தியாவிலேயே "திருப்பூர் 3 வது குடிநீர் திட்டம்" மட்டும் தனியாரால் நிறைவேற்றப்படும் குடிநீர் திட்டம். குடிநீர் வடிகால் வாரியம் 4 ரூபாய்க்கு கொடுக்கும் தண்ணீரை இந்த நிறுவனம் 26 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை திமுகவும் ஊக்குவித்தது.

எல்லா மெட்ரோ நகரங்களிலும் குடிநீர் விற்பனை தொடர்கிறது. இது அதிகரித்தும் வருகிறது. இந்த நிலை மாற்ற வேண்டுமானால், நமது நீராதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், மணல் கொள்ளை உள்ளிட்ட கனிம சுரண்டல் தடுக்கப்பட வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு சுற்றுச் சூழல் விதிகளை கடுமையாக அமலாக்க வேண்டும். அரசு இலவசமாக வழங்கும் குடிநீரின் தரத்தை அதிகரிக்க வேண்டும். மாறாக, தண்ணீர் பாட்டில் விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல். அரசே குறைந்த விலை குடிநீரை கொடுப்பதென்பது தற்காலிக ஏற்பாடுதான்.

தேர்தலுக்கு பின்னர் குடிநீர் உரிமையை பாதுகாக்கவும், மக்களுக்கு இலவசமாக சுத்திகரித்த நீர் கிடைக்கவும் திமுக போராடுமா?. ஸ்டாலினுக்கு அப்படிப்பட்ட உறுதி இருக்கிறதா?. இல்லை என்றே படுகிறது. அவரைப் பொருத்தமட்டில் இதுவொரு தேர்தல் ஆயுதம். மக்களுக்கு வாழ்க்கைப் போராட்டம்.

#Stalin I #DMK I #Water I #LPG I Sindhan Ra I #Privatisation

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels