நோட்டா: ஒரு அதிர்ச்சிகரமான தகவல் ...

Sindhan Ra

களத்தில் நிற்கும் எந்த வேட்பாளரும் இல்லை என்ற வாய்ப்பு இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். கடைசியாக தேர்தல் நடைபெற்ற 5 மாநில சட்டசபைத் தேர்ல்களில் (மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சதீஸ்கர், தில்லி, மிசோரம்) 'நோட்டா' பதிவான தொகுதிகள் குறித்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கிரிமினல் வேட்பாளர்கள், வன்முறையாளர்களுக்கு எதிராக இந்த வசதி பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.
ஆனால், நோட்டா - அதிகம் பயன்படுத்தப்பட்ட 25 தொகுதிகளில் 1 மட்டுமே பொது தொகுதியாக இருந்திருக்கிறது. 50இல் 5 தொகுதிகள் பொது தொகுதிகள். மற்ற தொகுதிகள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட/பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்.
வேட்பாளரை நிராகரித்தவர்கள் அதிகம் உள்ள 100 தொகுதிகளில் 3 இல் 2 பங்கு தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினருக்கான தொகுதிகள். சத்திஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இந்த நடைமுறை அதிகமாக இருந்திருக்கிறது (The Hinduசெய்தி: http://bit.ly/1fjmnWL )
நோட்டா வாய்ப்பும் தலித், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை/தீண்டாமைக் கருவியாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
--
காங்கிரஸ், பாஜக மட்டுமே வலுவாக உள்ள இந்த மாநிலங்களில் சாதிப் பஞ்சாயத்துகளின் ஆதிக்கமும் அதிகம் என்பதை வைத்துப் பார்க்கும்போது நம்மால் சாதி அடிப்படையில் வேட்பாளர்கள் நிராகரிக்கப்படுவதன் அடிப்படையை புரிந்துகொள்ள முடிகிறது.
தமிழகம், கேரளம் மாநிலங்களில் என்ன போக்கு தென்படுகிறது என்பதை காத்திருந்துதான் பார்க்க முடியும். ஆனால், நிச்சயம் இந்த விசயத்தில் தெற்கு தன்னை வேறு படுத்திக் காட்ட வேண்டும்.
I ‪#‎NOTA‬ I ‪#‎Election‬ I ‪#‎SocialJustice‬ I Sindhan Ra I ‪#‎BJP‬ I ‪#‎INC‬

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels