குக்கூ - இசைய கேட்டா மனசு குதிக்குதுங்க ...

ஏ பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிடுச்சே ...
ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு துள்ளிக் குதிச்சிடுச்சே ...

இசைய கேட்டா மனசு குதிக்குதுங்க. அதுவும் ... 'தீ கங்குல பால் சட்டிய போல் பொங்குறனே' னு அந்த பாடகர் பாடப் பாட, எனக்குமே என்னவோ பண்ணுது. தெரியாமலே, கண்ணுல கசியுது. சுதந்திரக் கொடியை நேசிக்கும் தமிழாவே மாறிடலாமானு ஒரு நொடி தோணுது.

ஒரே ஒரு பாட்டுல இதையெல்லாம் செய்ய முடியும்னா - படத்துல என்னெல்லாம் செய்திருப்பார்கள் ராஜுமுருகன் குழுவினர்??.

படத்தோட முன்னோட்டம் பார்த்தேன். 'ஒவ்வொரு பொண்ணும் சாமிடா' - நல்ல மனசு இருக்குறவன்தான் ஆம்பள என தனக்கான இலக்கணங்களை அழுத்தமாகவே பதியவைக்கின்றன வசனங்கள்.

சில படங்கள் அதிக ரசிகர்களைப் பெற்றும் பெருமையடையும். குக்கூ -வை ரசித்து ரசித்து நாம் பெருமையடைவோம் என்று தோன்றுகிறது.

http://www.youtube.com/watch?v=-XpJKfIAFLw

waiting for that moment ...

#குக்கூ

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels