Showing posts with label வாக்குப்பதிவு. Show all posts
Showing posts with label வாக்குப்பதிவு. Show all posts

வாக்குப்பதிவு நாள் ...

8 மணி வரை தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை எழுப்பி ... "கூட்டம் குறைவா இருக்காம். வாங்க போலாம்" என எழுப்பிக் கொண்டிருந்தார் ஒரு அம்மா.

நேற்று நள்ளிரவில் ஒரு நண்பர் என்னை அழைத்தார். பாரம்பரியமாக திராவிட இயக்க குடும்பம் அவருடையது. இருந்தாலும், அவருக்கு பெரிய அரசியல் ஞானமெல்லாம் இல்லை. இந்த முறை யாருக்கு வாக்களிப்பது? என்ற குழப்பம் வேறு. வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். யாருக்கு வாக்களிப்பது என்பதை விட, இனி நான் அரசியலில் பங்களிப்பை செலுத்த வேண்டும் என்ற உறுதியுடன் எங்கள் உரையாடல் முடிந்தது.

நான் காலையிலேயே வாக்குப்பதிவு மையத்துக்கு சென்றுவிட்டேன். நீண்ட வரிசையில், சிரித்த முகங்களுடன் மக்கள் காத்திருந்தார்கள். ஜனநாயகத்தில் தானும் ஒரு பங்களிப்பை செலுத்தப் போகிறோம் என்ற எண்ணம் வலுவாக தெரிந்தது. ஓட்டு எந்திரத்திற்கு சென்றதும் பட்டனை அமுக்கிவிட்டு அகன்றுவிட்டேன்.

வெளியே வந்த பிறகு, இரண்டு நிமிடங்கள் நின்று எல்லா பட்டனையும் கவனித்திருக்கலாமோ என்று தோன்றியது. சில நிமிடங்கள் அங்கே நின்றுகொண்டிருந்தேன். வாக்குரிமை பெற்ற தன் மனைவியை அனுப்பிவிட்டு, குழந்தையோடு காத்திருந்தார் என் நண்பர். அவருக்கு வாக்கு இல்லை. வாக்கு இருந்தும் சொந்த ஊருக்கு சென்று பதிய முடியாத 5 பேரை சந்தித்தேன்.

ஒரு தேசத்தின் திசைவழியை தேர்ந்தெடுக்க தனக்கு அளிக்கப்படும் வாய்ப்பை ஒவ்வொரு குடிமகனும் நேசிக்கிறார். நாம் தேர்ந்தெடுத்தவர் சிலர் ஊழல் செய்கின்றனர். சிலர் நமக்கே விரோதமான சட்டங்களை கொண்டுவருகின்றனர். இவர்களை திரும்ப அழைக்க நமக்கு உரிமையில்லை. விலைபோகிறவர்கள், அயோக்கியர்களை நாம் வெறுக்கிறோம். இந்த நேரத்தில் வாய்ப்பிருப்பவர்கள் ஆனந்த் டெல்டும்ப்டே எழுதிய (http://bit.ly/1rnfCuc)

இந்தக் கட்டுரையை வாசித்தும் பார்ப்பது உதவியாக இருக்கும். இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்பதுடன், கிடைத்திருக்கும் குறைந்த அதிகாரத்தை தன்னளவில் நேர்மையுடன் பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வு மக்களுக்கு இருக்கிறது. உண்மையிலேயே, நாம் நமக்காக பெருமைப்பட வேண்டும். ‪

#‎Vote‬ I ‪#‎Election‬ I Sindhan Ra I ‪#‎Reforms‬ I ‪#‎India‬

Labels