Showing posts with label 2014. Show all posts
Showing posts with label 2014. Show all posts

முழுமையற்ற ஜனநாயகமும், மக்களும் ...

நேற்று சாலையோரக் கடை ஒன்றில், நின்றபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கடைக்காரரின் நண்பர் அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருந்தார். அவரிடம் ஓடிச் சென்ற கடைக்காரர், மறக்காம 'கதிர் அரிவாளுக்கு' ஓட்டுப்போட்டுடுங்க என்று கேட்டுவிட்டு, காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு உணவு கொடுக்கத் தொடங்கினார்.

காலையில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருந்தது "நமது வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன். நமது சின்னம் கை. காங்கிரசுக்கு வாக்களிப்பீர்" என்று கேட்டது.

வீட்டை விட்டு வெளியே வந்தால் "ஆம் ஆத்மி" கட்சியின் வண்டி துடைப்பத்தோடு வந்தது. வெள்ளைக் குள்ளா அணிந்தவருடன் ஒரு டிப்டாப் இளைஞர் குலைந்து குலைந்து பேசிக் கொண்டிருந்தார். அனேகமாக ஆம் ஆத்மி மீது ஈர்ப்படைந்தவராக இருக்க வேண்டும். தொலைபேசியில் அவர்களின் எண்களைக் குறித்தபடி நகர்ந்தார்.

பிரச்சார வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட குரல் என்னை கடந்து சென்றது. "முரசு முரசு" என்ற பாடல் ஒலிக்க, "குஜராத்தை மிகச் சிறந்த மாநிலமாக மாற்றிய மகான் மோடியின் தலைமையில் இந்தியா" என அது உச்ச குரலில் வாக்குக்களைக் கேட்டது.

திமுகவினரும், அதிமுகவினரும் கிராமப்புறங்களில் தங்கள் கவனத்தை குவித்திருக்கிறார்கள். நகர மையத்தில் குஷ்புவும் வந்துவிட்டார். பாத்திமாபாபுவும் வந்துவிட்டார். நாம் தமிழர் கட்சியின் 'சீமான்' வேறு 2016 இல் நாங்கள் சட்டமன்றத்தில் போட்டியிடுவோம், இப்பொது இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என பேசிச் சென்றிருக்கிறார். இன்னும் சுயேட்சைகள், வெற்றிபெருவோம் என்ற நம்பிக்கையில்தான் களம் காண்கிறார்கள்.

சூரியன் சுட்டெரிக்க, நிற்காமல் ஓடுகிறார்கள் ஒவ்வொருவரும். திடீர் மவுசு மக்களுக்கு புதிதில்லை. மெளனம் பழகுகிறார்கள். அன்றாட வேலைகளில் எதுவும் நிற்கவில்லை. தேர்ந்தெடுக்கும் உரிமையைப் போல், திரும்பப் பெரும் உரிமை இல்லாத ஜனநாயகம்! நம்முடையது. குறைகள் நிறைந்த நம் தேர்தல் முறையை தெளிவாகவே கையாள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

be ஆப்பி, make everyone ஆப்பி ...

தை? சித்திரை? அல்லது ஜனவரி? - என சர்ச்சை எழுப்புவோர் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். மக்கள் எல்லா பிரசங்கங்களையும் கேட்டுக்கொள்வார்கள். ஆனால் கொண்டாட்டங்களை அவர்கள் விடுவதேயில்லை.

கொண்டாட்டங்கள் - உலக இயல்பு. குழந்தை பிறப்பா, சாவுச் சடங்கா, திருமணமா? அட ஒன்றுமேயில்லையானால் நீ காதலிக்கிறாயா? காதலில் வெற்றியா? தோல்வியா? - எதேனும் ஒரு பதில் சொல் - சிரித்துக் கொண்டோ, அழுதுகொண்டோ கொண்டாடலாம்.

கொண்டாட்டங்களில் இருந்து பிரிக்கமுடியாத மனிதர்களை நான் தெருவெங்கும் பார்க்கிறேன். விழிம்பு நிலையில், தன் வாழ்க்கையைத் தொலைத்து தெருவெங்கும் எதிர்காலத்தின் அவநம்பிக்கையாக அலைந்துகொண்டிருக்கும் பிச்சைக்காரர்களிடம் கூட கொண்டாட்டங்களுக்கு இடமிருக்கிறது.

சிலருக்கு சோறு, சிலருக்கு மதுபானம், சிலருக்கு நண்பர்கள், சிலருக்கு காதல், சிலறுக்கு உறவின் கூட்டம் - ஏதேனுமொருவிதத்தில் தன்னைப் மறுவுருவாக்கம் செய்துகொண்டேயிருக்கிறது மனித இனம்.

சிரிப்பதிலும், ஒன்றுகூடலிலும் மகிழ்ச்சி இருக்கிறது. அதனால்தான் தனிமையும், ஒதுக்குதலும் நம்மை வாட்டுகிறது. உயிர்ப்பின் உன்னதம் காரணமாகத்தான், மரணம் அச்சமுட்டுகிறது.

அன்பர்களே, பெருங்கூட்டமாக சேர்ந்துகொள்ளுங்கள், எல்லாக் காரணங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் - மொத்தத்தில் மகிழ்ச்சித் தாண்டவமாடட்டும். ஒட்டுமொத்த சமூகத்தின் மகிழ்ச்சியும், கொண்டாட்டமுமே நமது இலக்கு.

be happy, make everyone happy ...

Labels