Showing posts with label ஊடகங்கள். Show all posts
Showing posts with label ஊடகங்கள். Show all posts

Fixed Interview களும்: செய்தியாளர்களின் மனசாட்சியும் ...

நரேந்திர மோடிக்கு தோதான கேள்விகளை மட்டும் கேட்டு நடத்திய நேர்காணல் இந்தியா தொலைக்காட்சியில் வெளியானது மனம் ஒவ்வாத அந்த ஆசிரியர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

பொதுவாக எனது ஊடக நண்பர்கள் பலரும் தங்கள் நிர்வாகம் பாஜகவுக்கு ஆதரவாகவோ, குறைவாக விமர்சிக்கும்படியோ 'வழிகாட்டுதல்' கொடுப்பதை தெரிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஊடகத்துக்கும், அதன் நிர்வாகம் சார்ந்து சில சார்புகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் யாரும் வேலையை ராஜினாமா செய்ததில்லை. அது சாத்தியமும் இல்லை.

இந்திய ஊடகத் துறையில் மரியாதையான சம்பளமும், நிரந்தர வேலையும் எட்டாக் கனியாக உள்ள இந்த சூழலில், அவர்களால் எந்த எதிர்ப்பும் காட்ட முடியாதுதான்.

The Hindu அலுவலகத்தில் மாமிசம் சாப்பிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையையே எடுத்துக் கொள்வோமே. அங்கு ஒரு தொழிற்சங்கத்துக்கு வேறு அனுமதி இருக்கிறது. ஆனாலும், இப்படிப்பட்ட மனித உரிமை மீறல் உத்தரவுகளை எதிர்த்து என்ன குரல் எழுந்துவிட்டது??

ஒரு சாமானியனின் சிந்தனையில் செலுத்தப்படும் சுரண்டலானது, அவர் உடல் உழைப்பை திருடுவதை விடவும் கொடுமையானது. இந்த சுரண்டல்தான் ஆரோக்கியமான அறிவுச் சூழலை மாசுபடுத்தும் "முன் முடிவாக்கப்பட்ட செய்திகள்" "காசுக்கு எழுதப்படும் செய்திகள்" "மறைக்கப்படும், அல்லது கவனம் குறைக்கப்படும் செய்திகள்" உள்ளிட்டவைக்கு காரணமாக அமைகிறது.

ஊடகங்களிடமிருந்து கருத்து சுதந்திரத்தை மீட்க வேண்டியதன் தேவை அதிகரிக்கிறது. இப்போதைக்கு அந்த ஆசிரியரை வாழ்த்துவோம்.

சுனந்தா புஸ்கர் - படுகொலை ...

சுனந்தா புஷ்கர் உடல் கைப்பற்றப்பட்ட அடுத்த நொடியிலிருந்து, அவர் மரணத்திற்கு வருத்தப்படுகின்றன ஆங்கில தொலைக்காட்சிகள். முந்தா நாள் இரவு வரை, ஹெட்லைன்ஸ் டுடே ராகுலுக்கு அவர் மெசேஜ் செய்திருக்கிறார். சசி தரூருடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த பத்திரிக்கையாளர், தொலைபேசியில் அழைத்து அழுகிறார்.

அந்த 5 நட்சத்திர விடுதிக்குள், மறைத்துவைக்கப்பட்ட மொபைல் காமிராவில் வீடியோ எடுத்து காட்டுகிறார்கள். 'கொலையா?' மர்ம மரணமா?", "தற்கொலையா" என பதறுகிறார்கள்.

சசி தரூருக்கு - சுனந்தா 3 வது மனைவி, அவருக்கு இன்னொரு பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டதாக டுவிட்டரில் சில நாட்களுக்கு முன் சுனந்தா எழுதியிருந்தார். சசி தரூர் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனால், அவரது அந்தரங்கத்தை செய்தியாக்கி, விவாதப் பொருளாக்கியது நியாயமில்லை.

இப்போது ஏற்பட்டுள்ள சுனந்தாவின் மரணம் - மன அழுத்தத்தால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம். அப்படியிருப்பின், ஊடகங்களே உண்மையான கொலைகாரர்கள். சசி தரூரைத் தாண்டி - அவருக்கென ஒரு வாழ்க்கை இருந்தது.

ஆனால், அந்தரங்கத்துக்கு இங்கே என்ன மரியாதை இருக்கிறது??

Labels