Fixed Interview களும்: செய்தியாளர்களின் மனசாட்சியும் ...

நரேந்திர மோடிக்கு தோதான கேள்விகளை மட்டும் கேட்டு நடத்திய நேர்காணல் இந்தியா தொலைக்காட்சியில் வெளியானது மனம் ஒவ்வாத அந்த ஆசிரியர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

பொதுவாக எனது ஊடக நண்பர்கள் பலரும் தங்கள் நிர்வாகம் பாஜகவுக்கு ஆதரவாகவோ, குறைவாக விமர்சிக்கும்படியோ 'வழிகாட்டுதல்' கொடுப்பதை தெரிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஊடகத்துக்கும், அதன் நிர்வாகம் சார்ந்து சில சார்புகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் யாரும் வேலையை ராஜினாமா செய்ததில்லை. அது சாத்தியமும் இல்லை.

இந்திய ஊடகத் துறையில் மரியாதையான சம்பளமும், நிரந்தர வேலையும் எட்டாக் கனியாக உள்ள இந்த சூழலில், அவர்களால் எந்த எதிர்ப்பும் காட்ட முடியாதுதான்.

The Hindu அலுவலகத்தில் மாமிசம் சாப்பிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையையே எடுத்துக் கொள்வோமே. அங்கு ஒரு தொழிற்சங்கத்துக்கு வேறு அனுமதி இருக்கிறது. ஆனாலும், இப்படிப்பட்ட மனித உரிமை மீறல் உத்தரவுகளை எதிர்த்து என்ன குரல் எழுந்துவிட்டது??

ஒரு சாமானியனின் சிந்தனையில் செலுத்தப்படும் சுரண்டலானது, அவர் உடல் உழைப்பை திருடுவதை விடவும் கொடுமையானது. இந்த சுரண்டல்தான் ஆரோக்கியமான அறிவுச் சூழலை மாசுபடுத்தும் "முன் முடிவாக்கப்பட்ட செய்திகள்" "காசுக்கு எழுதப்படும் செய்திகள்" "மறைக்கப்படும், அல்லது கவனம் குறைக்கப்படும் செய்திகள்" உள்ளிட்டவைக்கு காரணமாக அமைகிறது.

ஊடகங்களிடமிருந்து கருத்து சுதந்திரத்தை மீட்க வேண்டியதன் தேவை அதிகரிக்கிறது. இப்போதைக்கு அந்த ஆசிரியரை வாழ்த்துவோம்.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels