சுனந்தா புஸ்கர் - படுகொலை ...

சுனந்தா புஷ்கர் உடல் கைப்பற்றப்பட்ட அடுத்த நொடியிலிருந்து, அவர் மரணத்திற்கு வருத்தப்படுகின்றன ஆங்கில தொலைக்காட்சிகள். முந்தா நாள் இரவு வரை, ஹெட்லைன்ஸ் டுடே ராகுலுக்கு அவர் மெசேஜ் செய்திருக்கிறார். சசி தரூருடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த பத்திரிக்கையாளர், தொலைபேசியில் அழைத்து அழுகிறார்.

அந்த 5 நட்சத்திர விடுதிக்குள், மறைத்துவைக்கப்பட்ட மொபைல் காமிராவில் வீடியோ எடுத்து காட்டுகிறார்கள். 'கொலையா?' மர்ம மரணமா?", "தற்கொலையா" என பதறுகிறார்கள்.

சசி தரூருக்கு - சுனந்தா 3 வது மனைவி, அவருக்கு இன்னொரு பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டதாக டுவிட்டரில் சில நாட்களுக்கு முன் சுனந்தா எழுதியிருந்தார். சசி தரூர் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனால், அவரது அந்தரங்கத்தை செய்தியாக்கி, விவாதப் பொருளாக்கியது நியாயமில்லை.

இப்போது ஏற்பட்டுள்ள சுனந்தாவின் மரணம் - மன அழுத்தத்தால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம். அப்படியிருப்பின், ஊடகங்களே உண்மையான கொலைகாரர்கள். சசி தரூரைத் தாண்டி - அவருக்கென ஒரு வாழ்க்கை இருந்தது.

ஆனால், அந்தரங்கத்துக்கு இங்கே என்ன மரியாதை இருக்கிறது??

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels