வெயிலின் வெள்ளம்

உச்சி வெயில்
ஊற்றியடிக்கிறது

முழுக்க நனைந்துதான்
வீடு செல்கிறோம்

மழைக்காலத்தில்
ஓட்டுக் கூரைதான் ஒழுகும்

காங்கிரீட் அறைக்குள்
நனைந்தபடி புரள்கிறோம்

ஜன்னல் வழியே
சாரலாய்த் தெரிக்கும்
வெக்கையோடுதான்
வேலை பார்க்கிறோம்

ஆட்களற்ற தெருவெங்கும்
அடித்து ஓடுகிறது
அனலின் வெள்ளம்

தெலுவுக் கூடையை
அழுந்தப் பிடித்தபடி
நீந்திக் கடக்கிறாள்
கருத்த கிழவி

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels