நரேந்திர மோடியும் - கற்றல் திறன் மேம்பாட்டு அட்டவணையும் !

கல்வி கற்றல் மற்றும் கற்பித்தல் திறன் குறித்த தேசிய அட்டவணை வெளிவந்துள்ளது. இரண்டு நிறுவனங்கள். ஏ.எஸ்.இ.ஆர் - மற்றும் என்.ஏ.எஸ் நடத்திய இரண்டு வெவ்வேறு ஆய்வுகள் மாநிலங்களின் வளர்ச்சி விகிதங்களைக் காட்டுகின்றன. http://www.thehindu.com/news/national/learning-levels-better-than-thought/article5737894.ece?homepage=true#lb?ref=infograph/0/

நாடு முழுவதும் உள்ள குழந்தைகளில் 85 சதவீதம், சொற்களை சரியாக அடையாளம் காண்கின்றன. மஹாராஷ்ட்ரா, தெற்கின் 4 மாநிலங்கள் திரிபுரா, மிசோரம், மணிப்பூர் ஆகியவை தேசிய சராசரியை விட கூடுதலாக பெற்றுள்ளன.

மொழியறிவில் முதலிடம் திரிபுரா - இரண்டாமிடம் மிசோரம், மூன்றாம் இடத்தில் தமிழகம், கோவா, மே.வங்கம், சிக்கிம் ஆகியவை உள்ளன. (அதிக மக்கள் தொகை கொண்டிருந்தாலும் - தமிழகமும், மே.வங்கமும் இடம்பெற்றுள்ளது மாநிலக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகளினால் மக்கள் பலன் பெற்றுள்ளதைக் காட்டுகிறது)

கணித அறிவில் தமிழகம், கர்நாடகம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன. சதவீத அடிப்படையில் வாசிப்புத் திறனில் தமிழகம் பின்தங்கியுள்ளது. கேரளம், மிசோரம் இமாச்சல் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

பொதுவாக நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையே பெரிய வித்தியாசமில்லை. மத்திய பிரதேசத்தில் பெண்கள் நிலை மிக மோசமாக உள்ளது. கேரளத்தில் பெண்கள் நிலை மிகச் சிறப்பாக உள்ளது. பிற மாநிலங்களில் ஆண், பெண் இடையே வித்தியாசமில்லை.

-------------------------

ஒட்டுமொத்த இந்தியாவில் ஒரு மாநிலம் மட்டும் வேறு விதமாக இருக்க முடியாது என்றாலும், ஓரளவு சிறந்த நிர்வாகத்தை மாநிலக் கட்சிகளும், இடதுசாரிகளும் கொடுத்துள்ளனர்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் இவ்வட்டவணையில் இடம்பெற்றிருக்க - எப்போதும்போல கற்றல் திறன் அட்டவணையில் குஜராத் இடம்பிடிக்கவில்லை. நரேந்திர மோடி ஒருவேளை மேற்கண்ட மாநிலங்களில் பிறந்திருந்தால் - வரலாறாவது படித்திருக்கலாம்.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels