அறிவாளியாகக் காட்டுதல் ... நேற்றைய நீயா நானா? !

அறிவாளியாகக் காட்டுவதற்கு என்னவெல்லாம் செய்கிறீர்கள்?? என்ற விவாதத்தில் - பலர் உண்மையைப் பேசினார்கள்.

உதவி இயக்குனராக உள்ள ஒரு பெண் ’எனக்கு கரகாட்டக்காரன் படம் பிடிக்கும். ஆனால் அதைச் சொன்னதும் கிண்டல் செய்தார்கள்’ என்று சொன்னார். - ஆம், தமிழக பண்பாட்டின் வேர்களை மறந்துவிட்டு ‘வித்தியாசமான’ படங்கள் வந்தால் - அதனை சிலாகிக்கும் ஒரு பகுதியினரும் உண்டு.

கரகாட்டக்காரனைப் பிடித்த இயக்குநர். தன் தொழில் சார்ந்த சில நுட்பங்களை கற்பதற்கான பல மொழிப் படங்களையும் நாடலாம். - ஆனால், அதன் பொருள் - என் உள்நாட்டு தொழில்நுணுக்கங்கள் கீழானவை என்பதல்ல.

அந்த விவாதம் - கொஞ்சம் அதிகமாகப் பொய் சொல்லவும் அறிவுருத்தல்களைக் கொடுத்தது.

என் பெயர் சிவப்பு - என்றொரு புத்தகம் குறித்து சொன்னார்கள். நான் இதுவரைக்கும் அதன் அட்டையைக் கூட பார்த்ததில்லை. பீத்தோவனின் இசையோ அல்லது ஏதோ போர்ச்சுக்கீசியரின் இசையோ - கேட்பதாகச் சொல்லிக் கொள்வதை பெருமையாகக் கருதுவதற்கும் ஒரு பெரும் எண்ணிக்கை இருக்கத்தான் செய்கிறதோ. தகுதிக்கு மீறிய பொய்களைச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

அதே சமயம் பொய்களை - ஒரு இமேஜ் உருவாக்கத்துக்காக நாம் சொல்வதும் உண்மைதான். அந்தப் பொய்களைச் சொல்வதன் மூலம், அந்த உயரத்தை எட்டியாக வேண்டிய உளவியல் நிர்ப்பந்தம் ஏற்படும். அப்படியான பொய்கள் நல்லவை.

#பி குட் ...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels