பாபர் மசூதி இடிப்பு : சில அதிர்ச்சித் தகவல்கள் ...

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் குறித்து - பாஜக தலைவர் அத்வானி "அது என் வாழ்க்கையிலேயே சோகமான தினம்" என்று சொன்னார். இப்போது உண்மை வெளியாகியுள்ளது.

அவர்கள், பலமுறை திட்டமிட்டனர், பாபர் மசூதியை எப்போது இடிக்க வேண்டும், எப்படி இடிக்க வேண்டும் என்று பயிற்சி செய்துதான் இடித்துள்ளனர். அதன் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பிடிப்பதுதான் அவர்களின் திட்டம்.

முலாயம் சிங் அரசாட்சியில் இருந்தபோது அவர்கள் முதல் முயற்சி செய்தார்கள். முடியவில்லை. எனவே இரண்டாவது முறை திட்டமிட்டார்கள். கல்யாண் சிங் முதல்வராக இருந்தபோது திட்டம் வெற்றியடைந்தது. முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் நடப்பதை அறிந்திருந்தார்.

குஜராத்தின் சர்கெஜ் பகுதியிலும், அயோத்தியாவின் நீலா டீலா பகுதியிலும் கர சேவர்களுக்கு மாதக் கணக்கில் பயிற்சி கொடுக்கப்பட்டதும். மேலும், கரசேவகர்களை 'தியாகிகளாக" ஆக்குவதற்காக விஹெச்பி அமைப்பின் அசோக் சிங்காலும், பஜ்ரங் தள் அமைப்பின் வினய் காட்டியரும் போலீசாரை துப்பாக்கிச் சூட்டுக்கு தூண்டும் விதத்தில் செயல்பட்டிப்பதும் அதில் வெளியாகியுள்ளது.

பெருமிதத்துடன் இந்து மதவெறியர்கள் தங்கள் சாதனைகளை விளக்குகிறார்கள். அப்பாவிகளின் பிணங்களின் மீது நடந்த அரசியல் கணக்கு வெளியாகிறது.

அறிமுகம்: http://www.cobrapost.com/index.php/video-detail?vid=153

முழுமையான பதிவுகள்: https://www.youtube.com/channel/UCJbGQNou2GBFAi_fnMP2_4A

இந்தியாவுக்கு ஒரு மாற்று தேவை - ஆனால், அது இந்த தரமற்ற நபர்களின் கூட்டமல்ல...

Sindhan Ra

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels