ஆம் ஆத்மியின் பயணத்தில், இது ஒரு சருக்கல் ...

மிஸ்ட் கால் குடுத்தாலே போதும், மெம்பர் ஆகிடலாம் என்பதை விட அரசியலை யாராவது கேலி செய்துவிட முடியுமா??

ஆம் ஆத்மி புதிய கட்சி, அரசியலில் புதுமைகளை செய்ய நினைக்கின்றனர். ஆனால், இப்படிப் போய், பழைய குட்டையில் மூழ்கிவிட்டு, என்ன புதுமையை படைக்க முடியும்??

இப்போது செயல்படும் கட்சிகளை உற்று கவனித்தால், அவற்றின் உறுப்பினர்கள் 'ரசிகர்' பட்டாளமாக மாற்றப்பட்டிருப்பது தெரியும். கட்சியின் தலைவர்கள் மீதான விருப்பத்தை தவிர எதையும் தங்கள் அரசியலாக அறிந்திருக்காத உறுப்பினர்கள் இருப்பதால்தான், கட்சிகள் எத்தகைய துரோகத்தையும் துணிந்து செய்கின்றன.

ஆம் ஆத்மியும் உறுப்பினருக்கான அடிப்படைத் தகுதிகளையெல்லாம் நீக்கிவிட்டு, மிஸ்ட் கால் கொடுங்கள், எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். கெஜ்ரிவால் ரசிகர்கள், அல்லது அரசியலற்ற ஏராளமானோரை இது ஈர்க்கலாம். ஆனால், இதனால் ஒரு அரசியல் மாற்றை ஏற்படுத்த முடியுமா??

ஒரு மெய்யான மாற்று அரசியல் - அரசியல் உணர்வுபெற்ற இளைஞர் பட்டாளத்தால் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு உறுதியான கொள்கைப் பரப்புரையே இப்போதைய அவசியமாகும்.

ஒரு அரசியல் கட்சிக்கான அடிப்படை கொள்கை, கொள்கை உணர்ந்த உறுப்பினர்கள், உறுப்பினர்களுக்கென தகுதி, அவர்களின் பணி, அர்ப்பணிப்புக்கு ஏற்ற வகையில் பதவிகள், கட்சியின் முடிவுகளை எடுப்பதிலும், அவற்றை விமர்சிப்பதிலும் உரிமைகள் என்ற அடிப்படையில் ஒரு கட்சியின் உறுப்பினர் சேர்ப்பு இருப்பதுதான், ஒரு கட்சியை ஜனநாயகத் தன்மையோடும், கொள்கையிலிருந்து மாறாமலும் நீடிக்கச் செய்யும்.

# ஆம் ஆத்மியின் பயணத்தில், இது ஒரு சருக்கலாகும் ...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels