உத்தர் கண்ட் - உதவி செய்ய கரம் நீட்டுவோம் ...

ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பலிவாங்கியிருக்கும் உத்தர்க்கண்ட் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எனது அனுதாபங்கள் ...

காட்டாற்று வெள்ளமாய் பாய்ந்தோடும் நதியின் சீற்றத்தில், சீட்டுக்கட்டு போல வீடுகள் சரிந்து விழுகின்றன. சிறுகச் சிறுகச் சேர்த்த செல்வங்களை கரைந்து செல்ல - கரகிறார்கள் ஒவ்வொரு மனிதஹும்.

2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவிலிருந்து, கடலூர் புயல் வரைக்கும் மனதில் வந்து அகல்கிறது. ஒரே ஒரு வீடு, எனக்கென ஒரு உலகம் - என்று வாழ்ந்துகொண்டிருந்த எத்தனை மனிதர்கள் - இந்தப் பேரழிவில் சிதைந்து போயிருப்பார்கள்.

சுனாமி பாதிப்பிலிருந்து மக்களை மீட்க - மத்திய அரசு ராஜிவ்காந்தி மறுவாழ்வு நிதியத்திலிருந்து ரூ.4 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கியது. மேலும் பல தன்னார்வ உதவிகள் வந்தன. கரையெல்லாம் பிணங்களாய் ஒதுங்கி நிற்க - பாதுகாப்பாய் இருந்த கோவை, ஈரோடு, திருப்பூரின் வாலிபர் சங்கத் தோழர்கள் அவைகளை அகற்றிக் கொடுக்க ஓடிச் சென்றார்கள்.

அதே நேரத்தில், சிமெண்ட் மீதான பங்குகளை விலையேற்றியது பங்குச் சந்தைகள். என்.ஜி.ஓக்கள் பலவும் - உதவி நிதியில் ஊழல் செய்ததும் நடந்தது.

பேரழிவுகளின் போது. மனிதன் விழித்துக் கொள்கிறான். பிணந்திண்ணிகளும் கூடுகின்றன.

உத்தர்கண்ட் - பலிகள் நம்மில் பலரை உலுக்கியிருக்கலாம். இடந்த அழிவுகளை - இயற்கை மட்டும் தீர்மானிப்பதில்லை.

உலகின் 99 சதவீத கனிமச் சுரங்கங்கள் - வெறும் 2 சதவீத மக்களின் தேவைகளுக்காக சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. - நமக்கு வசதிகள் தேவை - ஆனால், அதில் ஒரு திட்டமிடல் வேண்டும். லாபத்தை மட்டும் நோக்கமாய்க் கொண்ட இன்றைய சமூக அமைப்பால் - அந்த நிதானமான சிந்தனையை மேற்கொள்ள முடிவதில்லை.

”இமயச் சாரலில் ஒருவன் இறுமினால்
குமரி வாழ்பவன் மருந்து கொண்டோடுவான்”
-என்றார் பாரதிதாசன்

#சிந்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள். - முடிந்தவர்கள் மீட்பு உதவிகளுக்கும் கரம் நீட்டுங்கள்.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels