அரசு திரையரங்கம் நடத்தலாமா? ...

அரசு திரையரங்கம் நடத்தலாமா? என்பது ஒரு விவாதமாகியுள்ளது

திரையரங்கம், தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்குத் துறைகள் சாதாரணமானவை அல்ல. எல்லாத் தரப்பினரின் விருப்பத்தையும் பெற்றுள்ள சினிமா - ஒரு காஸ்ட்லி வியாபாரமாக மாற்றம் பெற்றுள்ள.

ரிலையன்ஸ் உள்ளிட்ட மிகப்பெரும் பணக்கார நிறுவனங்கள் அனைத்தும், பொழுதுபோக்கு துறையிலேயே அதிக லாபம் ஈட்டி வருவதும் கவனிக்கத்தக்கது. (தமிழகத்திலிருந்து ஆசிய பணக்காரர் வரிசையில் இடம்பிடித்த மாறன் சகோதரர்களும் ஒரு உதாரணம்) நூற்றுக்கணக்கான திரையரங்கங்களை ஆண்டுக்கணக்கில் ஒப்பந்தம் செய்து, ஒன்றுக்கும் ஆகாத திரைப்படங்களைக் கூட அதிக விளம்பரம் செய்து - நம் சட்டைப்பையைக் காலியாக்கிவிடுகின்றன.

சிறு திரைப்படங்களும், சுதந்திரமான படைப்பாளர்களும் - இதுபோன்ற சினிமா வியாபாரிகளின் தேவைக்காக 'கமர்சியல்' சமரசங்களுக்கும், பெண் உடல் வியாபாரத்திற்கும் அடிபணிவதற்கும் இத்தகைய ஏகபோகமும், கோடிகளை குவிக்கும் ஆசையும் காரணமாகிறது.

ஒரு துறையில் சிலரே (நடிகர்/நிறுவனம்) ஆதிக்கம் செலுத்துவது எப்போதும் ஆரோக்கியமான போட்டியை மறுத்து, குறுக்கு வழியில் லாபமீட்டவே வழிவகுக்கிறது.

இந்த சூழலில் அரசு சில திரையரங்கங்களை தொடங்குவதானது - எடுத்த எடுப்பிலேயே, மிகப்பெரும் வியாபாரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றாலும்.திரையரங்கம் கிடைக்காத, நல்ல படங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம். ஓரளவு டிக்கெட் விலையை கட்டுப்படுத்த உதவலாம்.

ஆனால், இவையெல்லாம் இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்தும் விதத்தில்தான் உள்ளது.

3 comments:

  1. உண்மை. இதனால் அரசுக்கும் வருமானம், சிறு தயாரிப்பாளர்களுகுகம் இலாபம். வணிகப் படங்களுக்குப் போட்டியாக, தரமான படங்கள் வெளிவரும்.

    ReplyDelete
  2. ஆம் ... அந்த விதத்தில் செயல்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  3. சாராயக்கடை நடத்தும் அரசு , திரை அரங்கம் நடத்தலாம். ஆனால் இன்று அரசு என்பது ஊழல் மிகுந்தது, இங்கும் பணம் பத்தும் செய்து,பிள்ளையார்- குரங்காகவே முடியும்.

    ReplyDelete

Labels