அன்னா ஹசாரே தெளிவாகத்தான் இருக்கிறார் ...

அன்னா ஹசாரே குறித்து மறந்தே போய்விட்டோம். முதலில் அவர் அரசியல் கட்சிகள், தேர்தல்களில் இருந்தெல்லாம் விலகியிருந்தார். ஆம் ஆத்மி வெற்றிபெற்ற போதும் கூட - மெளனம் காத்தார், விலகியிருந்தார்.

 காங்கிரசை மட்டும் வீழ்த்தினால் போதும் என்ற அளவில்தான் அவரின் நோக்கம் செயல்பட்டது. பின்னர், அவர் அணியில் இருந்த 'பாபா ராம்தேவ்' தன் அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்தியபோது அன்னாவின் உதடுகள் பாஜகவின் ஊழல்கள் குறித்து அமைதிகாத்தன.

ஆம் ஆத்மிக்கு - அன்னா ஏன் ஆதரவு கொடுக்கவில்லை என்பது அப்போது வெளிப்படையாகவே தெரிந்தது. அவர்கள் 'காங்கிரஸ் - பாஜக' இடையிலான ஊழல் கூட்டணியை எதிர்த்தார்கள். எனவே ஹசாரேவுக்கு அதில் ஈடுபாடு ஏற்படவில்லை.

லோக்பால் மசோதாவுக்காக ஆம் ஆத்மி தனது ஆட்சியையே இழக்கத் துணிந்த போதும் அன்னா அப்படியே இருந்தார். பின் சில கண்டிப்பான கருத்துகளை வெளிப்படுத்தினார்.

இப்போது அவர் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கியிருக்கிறார். முற்றிலும் புதிய திசையில். முற்றிலும் புதிய களத்தில்.

சாமானிய மக்களிடமிருந்து கோடிகளைச் சுறுட்டிய சஹாரா நிறுவனத்தின் ஆதரவாளரான மமதா அவரின் உற்ற நண்பராகியுள்ளார். சுதந்திர இந்தியாவில் மிக அதிக ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்தியும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத கம்யூனிஸ்டுகளை எதிர்த்து - அன்னா பிரச்சாரம் செய்யப் போகிறார்.

ஏனென்றால், வரக்கூடிய தேர்தலில் கம்யூனிஸ்டுகள் அதிக சீட்டுகளை பெற்றுவிடக் கூடாது. அவர்கள் பலம்பெற்றால் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது. இடதுசாரிகள் ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை வலியுறுத்துவார்கள். யுபிஏ 1 அரசாங்கத்தை ஆட்டுவித்தது போல - பெட்ரோல் விலை ஏறினாலும், பொதுத்துறைகளை விற்பனை செய்தாலும் தடுக்கப் பார்ப்பார்கள். கொள்கை அடிப்படையில் ஒரு மாற்றத்துக்காக போராடுவார்கள். அவர்கள் பலவீனப்பட வேண்டும்.

#அன்னா தெளிவாகத்தான் இருக்கிறார்.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels