உடலைவிற்க தயாராகும் மாணவர்கள் ...

சொல்லுங்க அண்ணே சொல்லுங்க என்ற நிகழ்ச்சி - ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. நேற்று மாலை அதில் கல்லூரி மாணவர்களை கலாய்த்துக் கொண்டிருந்தனர். கேள்வி இதுதான் ...

"எதிர்கால மனைவிக்கான தகுதிகள் என்ன?" "கணவனுக்கான தகுதிகள் என்ன?"

"ஒரு மாணவர் - 1000 பவுன் நகை போடவேண்டும்" என்றார். எல்லோரும் சிரித்தார்கள். "ஏன் கேட்கக் கூடாதா?" என்றபடி, 1000 பவுன் போட்டா திருமணம் செய்துகொள்ளலாம் என்று மறுபடியும் சொன்னார். அடுத்தவர், 'நிறைய சொத்து இருக்கணும்' என்றார், அடுத்தவர் 'பெரிய பணக்கார குடும்பமா இருக்கணும்' என்றார்.

அதுவொரு பொறியியல் கல்லூரி, எல்லா மாணவர்களின் விருப்பமும் ஒன்றாக இருந்தது.

பெண்களில் - ஒருத்தர் மட்டும், 'அவன் பெரிய பணக்காரணாக இருக்க வேண்டும்' என்றார். மற்றவர்களெல்லாம், "வீட்டு வேலைகளை கூச்சமின்றி செய்ய வேண்டும்" என்ற பதிலையே வெவ்வேறு விதங்களில் தெரிவித்தனர்.

பெருமைப்பட எந்தத் தகுதியுமற்ற அந்த பையன்களை நினைத்து வெட்கமாய் இருந்தது. பெண்களை அசிங்கப்படுத்துவதற்காக இந்த பசங்களெல்லாம் 'வேசி' என்ற சொல்லை பயன்படுத்துவதுண்டு. வெட்கமின்றி, இவர்களெல்லாம் அதையே பெருமையுடன், தொலைக்காட்சி முன் சொல்லிக் கொண்டிருந்தனர்.

மனிதர்களை உருவாக்க நாமெல்லாம் ஏதாவது செய்கிறோமா? ...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels