வீரம் - மூன்று செய்திகள் ...

திரைப்படங்களை வணிக திரைப்படம், கலைத் திரைப்படம் என்று பிரிப்பதில் எப்போதும் எனக்கு உடன்பாடில்லை. ஒரு ரசிகனாக தன்னிடம் வரும் மனிதனுக்கு, திரைப்படம் எதைக் கொடுக்கிறது? என்பதுதான் மையமான கேள்வி. அந்த வகையில் 'வீரத்தை' மூன்று காரணங்களுக்காக கொண்டாடலாம்.

'நான் உழைக்கிற சாதிடா' - படத்திற்கு இந்த வசனம் தேவையா? என்று தெரியவில்லை. ஆனால், இன்றைய சூழலில் சுரண்டுபவனை எதிர்க்க, நீ உழைக்கும் சாதியாய் இருந்தால் போதுமென்கிறது வீரம்.

படத்தின் வில்லங்களை இன்ன சாதி, இன்ன மதம் என்று அடையாளப்படுத்துவதிலிருந்து மாறுபட்டு - கந்துவட்டிக் கும்பலையும், பட்டாசு ஆலைகளின் ஒட்டச் சுரண்டும் கூட்டத்தையும் நிறுத்தியிருப்பது - சமகாலத்தின் தேவை.

இறுதியாக - நாம் என்னதான் நியாயத்தின் பக்கம் நின்றாலும், நம்மால் தனது சொகுசு வாழ்க்கையை இழக்க நேறும் வெறியர்களும்/ எதிர்வர்க்கமும் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் உழைக்கிறவனை உரசி, வன்முறைக்குத் தூண்டுவார்கள் ... ஆனால், இறுதியில் உழைக்கிறவன் வெல்வான்.

இந்த இடத்தில் உழைக்கும் சாதியின் பிரதிநிதியாக, அஜித் நிற்கிறார். உண்மையில், நாம் ஒவ்வொருவரும் நின்ற்க வேண்டும்.

# kudos man ... fight united :)

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels