கெஜ்ரிவால் அரசியல் - சாமனியனின் ஜனநாயக தாகம் !

தன்னை அடித்த ஆட்டோக்காரரை சந்தித்து பூங்கொத்து கொடுத்திருக்கிறார். மேலும், என்னை ஏன் அடித்தீர்கள்? என்று காரணத்தை விசாரிக்க, அந்த ஆட்டோ டிரைவருக்கு அழுகையே வந்துவிட்டது. அரவிந் கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கை வரவேற்புக்கு உரியது.

இதனை தேர்தல் ஸ்டன்ட் என்று சொல்லிவிடலாம். ஏற்கனவே இடதுசாரிகள் எளிமையாகவும், மக்களுக்கு நெருக்கமாகவும் இருக்கிறார்களே இவர்கள் மட்டும் எளியவர்கள் இல்லை என்றும் சொல்லலாம். ஆனால், அது சரியான விமர்சனம் அல்ல.

தில்லி மெட்ரோ சானல் அளவுக்கே விசாலப் பார்வை கொண்ட ஊடகங்களின் தேசிய செய்தியாளர்களின் கவனத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மைதான். முழுமையான கொள்கை சார்ந்த மாற்று சக்தியாக அவர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதனைத் தாண்டியும் இந்தப் பிரச்சனையை வேறு ஒரு கோணத்தில் பார்ப்பது அவசியம்.

ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு வளரும் பகுதிகளான தில்லி, ஹரியானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களில் காங்கிரஸ் - பாஜக மட்டுமே உள்ளன. இந்தக் கட்சிகள் பெரு முதலாளிகளின் ஏஜெண்டுகளாக மாறிவிட்டதால், பிராந்திய மக்களின் உணர்வுகளையோ, ஏழை நடுத்தர, சாமானிய மக்களின் மெய்யான பிரச்சனைகளையோ பேசுவதில்லை. நாங்கள்தான் ஆள்வோம் என்ற திமிரோடு பவணிவரும் காங்கிரஸ் - பாஜக கொள்கை சார் விவாதத்தை ஏற்படுத்தவும் தயாரில்லை.

இந்த நிலையில், ஒருபக்கம் இடதுசாரிகளுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும் - மாநிலக் கட்சிகள் இல்லாத இடங்களில் ஆம் ஆத்மிக்கும் செல்வாக்கு உருவாகிறது. தேசம் ஒரு முழுமையான ஜனநாயகத்துக்கு ஏங்குவதும்... சாதாரண மக்களை முன்நிறுத்திய விவாதத்தை விரும்புவதும் இதன் மூலம் வெளிப்படுகிறது.

#ஜனநாயகம்வெல்லவேண்டும்

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels