மான் கராத்தே - கல் நீக்கி கடிக்க !

"10 திருக்குறள் கூட மனப்பாடம் செய்ய முடியாதவர்களால் - காதலிக்கப்படும் பெண்களுக்கான ஒரே தகுதி 'வெள்ளையாய் இருப்பது'.பெண்ணைப் பெற்ற தமிழ் வாத்தியார்கள் அரை முட்டாள்கள்."

"வாழ்க்கையில் வெற்றியடைய எந்த திறமையும் தேவையில்லை. மக்களை குஷிப்படுத்த ஒரே வழி - ஓபன் தி டாஸ்மாக் ..." 'மான் கரேத்தே' திரைப்படத்தின் வழியாக எதையாவது நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இப்படித்தான் ஆகும்.

சினிமாவில் எப்போதும் யதார்த்தமான கதைகளைத்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை, ஆனால்  ஒரு கதைக்கு வியாபாரத்தைத் தாண்டி சில நோக்கங்கள் இருக்க வேண்டும்.

'IT' ஊழியர்களெல்லாம் நிறைய சம்பாதித்து - கூத்தும் கும்மாளமுமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பது நமது பொதுப்புத்தி. ஆனால், எத்தனையோ உமாமகேஸ்வரிகளும் 'ஐடி' தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அப்பாவை, குடும்பத்தை, குழந்தையைப் பிரிந்து - வாழ்க்கைப் பாட்டுக்காக கசக்கிப் பிழியப்படுகிறார்கள் - என்ற உண்மை நமக்கு எப்போதாவதுதான் தெரிகிறது.

காதலைத் தாண்டி - காதலில் நிறைய இருக்கிறது. பொருளற்ற உரையாடல்களுக்கு பின்னும் வாழ்க்கை இருக்கிறது. உங்கள் பெரிய மூக்கோ, அகண்ட கன்னங்களோ, அசிங்கமான மூக்கோ இன்னொருவரால் எள்ளப்படும்போது - வாய்விட்டுச் சிரிப்பது மனிதத் தன்மையற்ற கேவலம். இதையெல்லாம் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், ஒரு படைப்பாளனுக்கு அக்கறையில்லை.

நாம் வாழ்க்கையை சற்றும் பிரதிபளிக்காத, தகுதியற்ற படங்களை - கல் நீக்கி, கடித்துச் சாப்பிட பழகிவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். அதீத சகிப்புத் தன்மை - தமிழனின் பொது குணமாகிவருகிறது. விஜயகாந்த்துகள் அரசியல்வாதிகளாக இருக்கும் தமிழகத்தில் மான் கராத்தேவுக்கு மார்க்கெட் இருப்பது அதிசயமில்லை.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels