பாஜகவின் அரசியல் - வளர்ச்சியா? பிரிவினையா?

பொதுவாக பாஜக வளர்ச்சி அரசியலுக்கு மாறிவிட்டது என்ற பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது. இது உண்மையாக இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கிளப்புவதையே அதிகாரத்தை பிடிப்பதற்கான தனது ஆயுதமாக பயன்படுத்துவதை பாஜக நிறுத்தவில்லை என்றே தெரிகிறது ...

உத்திரபிரதேசத்தின் "முசாபர் நகர்" பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் கலவரங்கள் தூண்டப்பட்டு, ஏராளமானோர் வீடுகளை இழந்து வெளியேறியதை அறிவோம். அதன் பின்னணியாக தவறான வீடியோக்களை திட்டமிட்டு பரப்பிய எம்.எல்.ஏக்கள் கைதாகினர். ஆனால், கிடைத்த சில நாட்களில் சாதிப் பஞ்சாயத்துகளின் வழியே தங்கள் விஷமப் பிரச்சாரத்தைக் கொண்டு சென்று கிராமங்களுக்கு இடையே மோதலை உண்டாக்கினார்கள்.

இந்த நிலையில், அந்த கலவரத்தை எப்படியும் - நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தி ஓட்டாக மாற்றிடிவ வேண்டும் என்ற வகையில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. (http://www.ndtv.com/elections/article/election-2014/truth-vs-hype-the-rss-mission-modi-504888)

இந்த நிலையில், பாஜகவின் உத்திர பிரதேச மாநில தேர்தல் பொருப்பாளரும், மோடியின் வலதுகரமும், போலி என்கவுண்டர் மற்றும் அரசே கலவரங்களுக்கு துணைபோன வழக்குகளில் தொடர்புடையவருமான அமித் ஷா ... உ.பி மாநிலத்தின் அப்பாவி மக்களிடையே மேற்கொள்ளும் பிரச்சாரம் அம்பலத்துக்கு வந்திருக்கிறது.

தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ள வீடியோ ஆதாரங்களில் - அவர் இரு மதங்களுக்கு இடையே வெறுப்பை விதைப்பது பதிவாகியுள்ளது. இந்துக்களிடையே அவர் பேசுகிறார் "மேற்கு உ.பியில் நடக்கும் இந்த தேர்தல் நமது கெளரவத்திற்கான தேர்தல், அவமானத்துக்கு பலிதீர்ப்பதற்கும், அநீதி இழைத்தோருக்கு பாடம் புகட்டுவதற்குமான தேர்தல்" "இது மற்றுமொரு தேர்தல் அல்ல. நமது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அவமானத்துக்கு நாம் பலியெடுக்க வேண்டும்." என தொடர்ந்து பேசிவருகிறார்.

அப்பாவிகளை பலிகடாவாக்கும் அரசியல் ஒதுக்கப்பட வேண்டும்.

#ஒதுக்குவோம்!

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels