கோப்ரா போஸ்ட் கிளப்புவது வன்முறையா???

பாபர் மசூதி இடிப்புக்கு பின்னணியில் உள்ள சதியை கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது. "இந்து முஸ்லிம் வன்முறையை" தேர்தல் நேரத்தில் தூண்டுவது கேவலமில்லையா? என சில பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பரிவாரங்கள் இணையத்தில் கேள்வி எழுப்புகிறார்கள்.

தேர்தல் ஆதாயத்துக்காக கலவரத்தைத் தூண்டுவது கேவலமான விசயம். கோப்ரா போஸ்ட் இதழ், இந்தியர்களிடையே மதவெறியைத் தூண்டியவர்களை அம்பலப்படுத்தியிருக்கிறது. அழுகிய புண்ணில் வாழும் புழுக்களைப் போல, இந்திய சமூகத்தில் கலவரங்களைத் தூண்டி, அந்தப் புண்ணில் அதிகாரத்தைத் தேடும் பாஜக பரிவாரத்தையும், ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகளையும் - அவர்கள் வாயாலேயே அம்பலப்படுத்தியுள்ளது.

பாபர் மசூதியை இடிக்க 38 நாட்கள் பயிற்சி எடுத்து, திட்டமிட்டு சதி செய்தவர்கள் இந்துக்கள் அல்ல. அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டுமென உணர்ச்சிகளை உசுப்பி விட்டதும் இந்துக்கள் அல்ல. மாறாக, இந்து மதத்தை அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளும் அயோக்கியர்கள்.

இப்போது, அந்த அயோக்கியர்களை இந்திய மக்கள் அறிந்துகொள்ளச் செய்திருக்கிறது "கோப்ரா போஸ்ட்" இணையதளம். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான அந்த அரசியல் வில்லத்தனம் வெளியே வந்திருக்கிறது.

இதனால் இந்து - முஸ்லிம் சகோதரர்களாக வாழும் "இந்தியர்கள்" உண்மையை உணர்ந்துகொள்வார்கள். எனவே, அந்த சதி அம்பலப்பட்டதால், மக்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும், பிரிவினையால் அரசியல் செய்ய நினைக்கும் பாஜக பரிவாரம் தனிமைப்படும்.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels