நீதியரசர் சந்துருவோடு சந்திப்பு ...

நீதியரசர் சந்துருவுடன் பேசியபோது, அவரின் அனுபவ அடர்த்தி எங்களை ஆச்சர்யப்படுத்தியது. அவருக்கு செவித்திறன் குறை உள்ளதை அறிந்துகொண்டேன். (என் அப்பா நினைவுக்கு வந்து நெகிழ்ச்சி கொடுத்தார்.)

சேரன்மாதேவி குருகுலத்தில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக பழ.அதியமான் எழுதிய புத்தகம், பெருமாள்முருகன் தொகுத்து 'சாதியும் நானும்' என்ற தலைப்பில் காலச்சுவடு வெளியிட்டுள்ள புத்தகம், ஜெயமோகன் எழுதிய வெள்ளை யானை, பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய புலி நகக் கொன்றை, ஜோ டி குரூஸ் எழுதிய கொற்கை மற்றும் டி.செல்வராஜ் எழுதிய 'தோல்' ... உள்ளிட்டு சமீபத்தில் வாசித்த புத்தகங்களைக் குறித்து பகிர்ந்துகொண்டார்.

சாதாரண, விழிம்பு நிலை மக்களைக் குறித்த படைப்புகள் இப்போதுதான் வரத் தொடங்கியுள்ளன. மேற்கண்ட புத்தகங்களை வாசிப்பது, சாதி ஆதிக்கத்தையும், அதற்கெதிராக தேவைப்படும் ஒன்றுபட்ட எதிர்ப்பையும் உணர்ந்துகொள்ள உதவும் என்றார்.

விடுதி அறையின் வெளிச்சக் குறைவு காரணமாக, அந்த உரையாடல் முழுமையாக பதிய முடியவில்லை. (ஒரு பகுதி மட்டும் அலைபேசி காமிரா வழியே கிடைத்தது: http://www.youtube.com/watch?v=uo4lub6UiMg)

'நமக்குள் இருக்கும் மனிதனை சாகாமல் பார்த்துக் கொள்வது ஒரு போராட்டம், அதில் வெற்றியடைகிறவர்கள், வரலாற்றில் நிற்கிறார்கள்' என்ற வாசகத்தின், உயிர்பெற்ற வடிவமாக - நீதியரசர் சந்துரு எனக்குத் தெரிந்தார்.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels