களம் கொதித்துக் கொண்டிருக்கிறது. முக்கிய அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி உருவாகியிருக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் சில கவர்ச்சி அறிவிப்புக்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.
களத்தில் நிற்கும் பலரும் இலங்கை மக்களுடனான மனித நேய உறவுகளை முன் நிறுத்தியே போராடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த அரசியல் சாயலையும் நீங்கள் விரும்புவதில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நல்லது, நமது கட்சிகள் பலவும் கம்பெனிகள் போல மாறி, தலைவன் என்ற பிம்பத்தில் கட்டுண்டுதான் கிடக்கின்றன. ஆனால், நீங்கள் அரசியலற்றவர்களாக தொடரக் கூடாது.
இதுவொரு காலம் தாழ்ந்த போராட்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அரசுக்கும் - மக்களும் பிரதான அக்கறைகள் வேறு வேறு என்ற நிலை தொடரும் வரை - நாம் போராட வேண்டிய தேவை இருப்பதால் - இந்தத் தாமதம் ஒன்றும் தவறல்ல.
அமெரிக்காவின் தீர்மானத்தில் எமக்கு உடன்பாடில்லை. அவனே ஒரு பெரும் கொலைகாரன் என்பதால் - அவர்களின் தீர்மானம் நீர்த்துக் கிடப்பதில் ஆச்சர்யமும் இல்லை. இன்றைய உலகம், அதிகாரப் போட்டிக்காகவே இப்பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறது. உலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அளவு - மனிதநேய சக்திகளின் ஒற்றுமை உருவானதாகத் தெரியவில்லை.
ஏராளமான தோற்கடிக்கப்பட்ட போராட்டங்களை உலகம் கண்டிருக்கிறது. - ஆனால், மனிதர்கள் வாழும் மட்டும், மனித நேயம் வெல்லும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
உங்கள் எல்லைக்கு உட்பட்ட இரண்டு கோரிக்கைகளை - தொடர்ந்து முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவில் வாழும் அகதிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது. ஒவ்வொரு கிராமங்களிலும், சேரி என்றொரு அகதி நிலை தொடருவதற்கு முற்றுப் புள்ளி வைப்பது.
இதுபோக ஏராளம் விசயங்கள் போராடுவதற்கு இருந்தாலும், தொப்புள் கொடி உறவுகளின் மீதான நேசம் என்ற அளவிலிருந்தே இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்துகிறேன்.
#சம நீதிக்கான மெய்யான உள்ளக்கிடக்கை உங்களுக்கு இருந்தால் - என் கோரிக்கையில் நெருடல் இருக்காது என்ற நம்பிக்கையுடன்.
- இரா.சிந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...”
- 2014
- 65 நாட்களில் 85 பேர் தற்கொலை
- அஞ்சலி
- அதிமுக
- அதிர்ச்சி
- அதுவே புரட்சி
- அந்தரங்கம்
- அப்பா
- அமெரிக்கா
- அரசியல்
- அவமானம்
- அழகியல் (கவிதை)
- அறிக்கை
- அறிவியல்
- அனுபவம்
- அன்பு
- அன்பு (கவிதை)
- அன்னா ஹசாரே
- ஆணாதிக்கம்
- ஆம் ஆத்மி
- ஆயிரத்தில் ஒருவன்
- ஆன்மீகம்
- இணையம்
- இயக்குனர்
- இரா.சிந்தன்
- ஈராக்
- உடலை விற்றல்
- உணர்வு
- உரையாடல்
- ஊடகங்கள்
- ஊழல்
- ஊனம்
- எம்ஜிஆர்
- எல்லாம் நல்லபடியாக நடக்கிறது
- எளிய பொருளாதாரம்
- என் பார்வை
- ஏகபோகம்
- ஏர் இஞ்சின்
- கட்டுரை
- கண்ணோட்டம்
- கதையாடல்
- கம்யூனிஸ்டுகள்
- கருத்து
- கல்வியறிவு
- கவிதை
- காங்கிரஸ்
- காதல்
- கார் தொழில்நுட்பம்
- கிரிக்கெட்
- குக்கூ
- குடிநீர்
- குடும்ப உறவுகள்
- குற்றம்
- குஜராத்
- கூட்டாட்சி தத்துவம்
- கை நீட்டியவுடன் கல்விக்கடன் பெறுவது எப்படி?
- கொண்டாட்டம்
- கொலைக்காட்சி
- கோடை
- கோப்ரா போஸ்ட்
- சதுர் வர்ணம்
- சமத்துவம்
- சமூகம்
- சர்ச்சை
- சாதி
- சாமானிய டைரி
- சிந்தனை
- சிந்தன்
- சிவகார்த்திகேயன்
- சினிமா
- சினிமா விமர்சனம்
- சீக்கிய கலவரம்
- சுதந்திர தினம்
- சுவாரசியம்
- செய்தி
- செய்திகள்
- செல்போன் டவர்களால் புற்றுநோய் அபாயம்
- சே
- சோசலிச மாற்று
- சோசலிசம்
- தமிழகம்
- தர்க்கம்
- தாத்தா
- தாலி
- தி இந்து
- திமுக
- திறன்
- தீண்டாமை
- துளிப்பா
- தெகிடி
- தேர்தல்
- தொலைக்காட்சி
- தொழிலாளர் உரிமை
- நகைச்சுவை
- நரேந்திர மோடி
- நிகழ்வு
- நிகழ்வுகள்
- நீயா நானா
- நொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன?
- நோட்டா
- பணம்
- பதிவு
- பத்திரிக்கை சுதந்திரம்
- பலாத்காரம்
- பாடல்
- பாடல்கள்
- பாபர் மசூதி
- பார்ப்பனீயம்
- பாலியல் வன்முறை
- பாலுமஹேந்திரா
- பாஜக
- பீப்ளிக்களும் பிரதமரும்
- புத்த சமண மதங்களின் தோற்றமும் - அவசியமும் ...
- புத்தகத் திருவிழா
- புத்தகம்
- புனைவு
- புனைவுகள்
- பெண்
- பெண்ணடிமை
- பேட்டி
- பேரழிவு
- பேரறிவாளன்
- மகளிர்தினம்
- மதவெறி
- மதிப்பீடுகள்
- மரண தண்டனை
- மனிதம்
- மாணவர்கள்
- மாவோ
- மாற்றுத்திறன்
- மான்கராத்தே
- மேக்ஹ்னா
- மொழியாக்கம்
- ரேசன்
- லெனின்
- வர்க்கத் தோழனே...
- வன்முறை
- வாகை சூட வா
- வாக்குப்பதிவு
- வாரிசு அரசியல்
- வாழ்க்கை
- வாழ்த்து
- வாழ்வியல்
- விக்கிலீக்ஸ்
- விமர்சனம்
- விவாதங்கள்
- விவாதம்
- வீரம்
- வெய்யில்
- வைகோ
- ஜிஎஸ்எல்வி
தமிழ்சமூகம் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதன்பின்னர் தமிழ்த்தேசியம் அமைப்போம்
ReplyDeleteதமிழ்த் தேசியம் என்பது ஒரு இலக்கே அல்ல. மக்கள் - மக்கள் விரோத அரசுகள் என்ற பிரிவினை இருக்கும் வரைக்கும். பசியால் செத்து விழும் ஒவ்வொரு குழந்தையும் தமிழனின் குழந்தைதான் ... தமிழர் - உலக விடுதலைக்கு முன்னோடியாக அமைவார்களேயன்றி. தன்னளவில் ஒரு கூடு கட்டும் சுயநலமிகளாக ஒருபோதும் இருப்பதற்கில்லை.
ReplyDeleteசிந்தன் ,
ReplyDeleteஉங்கள் பின்னூட்டம் மிக சுவையான இனிப்பு ,உங்கள் படைப்பை விட. இது தான் நான் உண்மையான எளிய தமிழனிடம் எதிர் நோக்குவது ,மிக அருமை. வாழ்த்துக்கள்.