மாற்றுத் திறன் X ஊனம் ?

ஊனமுற்றோரை, மாற்றுத்திறனாளி என்று அழைக்க நாம் பழக்கப்பட்டு வருகிறோம். குருடர், செவிடர் என்பதை விட - மாற்றுத் திறனாளி என்ற வார்த்தை நேர்மறையாக இருக்கிறது.

அதே நேரம், வார்த்தையை மட்டும் நேர்மறையாக மாற்றிவிட்டு, அவர்களின் உரிமைகளை காற்றில் விடும் போக்கும் இல்லாமலில்லை.

எத்தனை பொது கட்டடங்களில் சறுக்குப் பாதைகள் உள்ளன? எத்தனை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காதுகேளாதோர் புரிந்துகொள்ள வழிவகை உண்டு? எத்தனை சாலைகளில் பார்வையற்றோர் நடந்து செல்லும் விதத்தில் நடைபாதைகள் பராமரிக்கப்படுகின்றன? எத்தனை கழிப்பிடங்களில் ஊனமுற்றோருக்காக சிறப்பு வசதிக இருக்கின்றன??

ஒருவர் ஊனமடைவதை இயற்கை தேர்வு செய்கிறது. அல்லது அவசர வாழ்க்கை ஏற்படுத்தியுள்ள சூழல் மாசுபாடுகள் முடிவு செய்கின்றன. மனித சமூகம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால், ஊனமுற்ற ஒரு பகுதியினர் உருவாவது இயற்கை என்கின்ற நிலையில் - அவர்களுக்கான சிறப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது நம் அனைவரின் கடமையாகும்.

இனி ஒரு ஊனமுற்றோரை சந்திக்க நேர்ந்தால் - அவரின் மாற்றுத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள ஏதாவது செய்தோமா? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே - மாற்றுத் திறனாளி என்று அழைக்க முற்படுவோம்.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels