சேர்மன் மாவோ - நாம் விழித்தெழுந்து விட்டோம்!


சீனாவின் புரட்சி நாயகர் மாவோவின் வரலாற்றுப் புத்தகம் படிக்கக் கிடைத்தது. 1919 ஆம் ஆண்டு அவர் ஆற்றிய உரையிலிருந்து சிறு பகுதியை இங்கே தருகிறேன் ...
  • ----
  • நாம் விழித்தெழுந்து விட்டோம்! உலகம் நம்முடையது, அரசு நம்முடையது, சமூகம் நம்முடையது. நாம் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்? நாம் செயல்படாவிட்டால் வேறு யார் செயல்படுவார்கள்?...
  • கருத்தியல் ரீதியிலான விடுதலை, அரசியல் ரீதியிலான விடுதலை, பொருளாதார விடுதலை அனைத்தும் எந்த நரகத்தின் அடியாழத்தில் இதுவரையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனவோ. அந்த நரகத்தின் அடியாழத்திலிருந்து வெடித்துக் கிளம்பி நீல வானத்தைக் காண துடித்துக் கொண்டிருக்கிறன.
  • நமது மக்கள் மிகப்பெரிய உள்ளாற்றலைக் கொண்டவர்கள். ஒடுக்குமுறைகள் மிகவும் தீவிரமாக இருக்கிறது. அதற்கான எதிர்வினையும் மிகப்பெரிய ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. நீண்ட நாட்களாக இவை தொடர்ந்துகொண்டேயிருப்பதால் - விரைவிலேயே ஒரு வெடிப்பு நிகழத்தான் போகிறது. 
  • ஒன்றைமட்டும் என்னா துணிந்து சொல்ல முடியும். ஒருநாள் மற்றெந்த மக்களைக் காட்டிலும், முழுமையான மாற்றத்தை நமது மக்கள் துணிந்து செய்யப் போகிறார்கள். மற்றெந்த மக்களின் சமூகத்தைக் காட்டிலும் நமது சமூகம் பிரகாசமானதாக இருக்கப் போகிறது. 
  • முழு வலிமையுடன் நாம் அனைவரும் முன்னேற வேண்டும். நமக்கான பொற்காலம், கீர்த்தியுடன் சிறப்பு வாய்ந்த காலம் நமக்கு முன்னால் இருக்கிறது.

இதனை ஒரு தீர்க்க தரிசனமாக நினைத்து இங்கே பதியவில்லை. மாறாக, இந்தியாவைப் போலவே ஒரு மாபெரும் தேசத்தின் புரட்சியை சாதித்துக் காட்டிய இயக்கம் - ’அரசியல்’, ‘கருத்தியல் (மதம், இனம் உள்ளிட்டு பிற பிரிவினை/ஆதிக்க சிந்தனைகள்)’, ‘பொருளாதார’ அடிமைத்தனங்களை ஒரே நோக்கோடு எதிர்த்தென்பதை இந்தக் கூற்று வெளிப்படுத்துகிறது.

மேலும், மக்கள் மீது அசராத நம்பிக்கை கொண்டிருந்த சீன கம்யூனிச இயக்கம் - மேற்கண்ட மாவோவின் மேற்கோள் எழுதப்பட்டு 30 ஆண்டுகளில் புரட்சி விடியலை (1949) எழுதியது. - 30 ஆண்டுகள் ஒரே நோக்கோடு நடைபெற்ற மக்கள் இயக்கம் அது...

# இந்தியாவைக் கட்டமைக்கும் விவசாயிகளின் குடிசைகளிலும், தொழிலாளர்களின் குடியிருப்புகளிலும் - புரட்சிக்கான அக்கினி விதை கனன்றுகொண்டுதான் இருக்கிறது. ஒரு நாள் நம் தேசத்தின் எழுச்சியை அது சாதிக்கும். மேன்மையுற்ற இந்தியாவை நாமும் பெற்றெடுப்போம் !

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels