ஏனிந்த சரணாகதி Mr. கெஜ்ரிவால்??

ஒருபக்கம் அம்பானியை விமர்சித்துவிட்டு - இந்திய முதலாளிகளிடம் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் கெஜ்ரிவால். முதலாளிகள் அமைப்பான சிஐஐ நடத்திய சந்திப்பில் அவர் கொடுத்த விளக்கத்தில் 'அரசாங்கம் தொழில் நடத்தக் கூடாது' என பொதுத்துறைகளை அரசு கைவிடும் நடவடிக்கை உட்பட பல தாராளமய பொருளாதார நடவடிக்கைகளை ஆதரித்துள்ளார்.

ஆம் ஆத்மியின் கொள்கைகள் என்ன? என்று பலதரப்பு கேள்வி எழுப்பியபோதும் வாய் திறக்காதவர்கள் - அம்பானி எதிர்ப்பால் தொழிலதிபர்களின் பகைமைக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற அவசரத்தில் இதைச் செய்துள்ளது வெளிப்படை.

ஒவ்வொரு, பட்ஜெட் உரை தயாரிப்பின்போதும் - பெரிய முதலாளிகளைச் சந்திப்பதும், கோரிக்கைகளைக் கேட்பதும் காங்கிரஸ், பாஜகவின் வழக்கம். 'ஏன் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் சந்திப்பதில்லை' என்ற கேள்வியை இடதுசாரிகள் முன்வைப்பார்கள்.

ஆனால், அரசு இதுவரையிலும் தன் நிதிநிலை அறிக்கை மீதான சாமானியர்களின் எதிர்பார்ப்பை கேட்டதில்லை. 'சாமானியர்களின்' கட்சியான ஆம் ஆத்மியும், தற்போது அதைத்தான் செய்திருக்கிறது.

உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் என்ன? என பலமுறை கேட்டும் விளக்கம் கொடுக்க முன்வராதவர்கள். தற்போது பெரிய நிறுவனங்களிடம் போய் விளக்கம் கொடுத்திருக்கின்றனர். கெஜ்ரிவாலின் விளக்கங்களில் பல அபத்தமானவை. அப்பட்டமாக, தொழிலதிபர்களின் மனதில் இடம்பிடிக்கும் விருப்பத்தை வெளிப்படுத்துபவை.

இந்த விருப்பத்தில் அவர்கள் வெற்றியடையலாம். ஆனால், அந்த வெற்றி, சாமானியர்களின் வெற்றியாக இருக்கப்போவதில்லை.

1 comment:

  1. there is no surrender. he has clarified his economic policy. nothing wrong in it. bjp and cong are blaming his party as against business. he is just clarifying.

    ReplyDelete

Labels