மூவர் தூக்கு தீர்ப்பு - பாஜகவை தோற்கடிக்குமா?

"கொடூரமான அரசியல் படு கொலைகள் .. தண்டனை பெற்ற குற்றவாளிகள் , மன்னிக்கப் படவேண்டியவர்களா ?"

"தமிழக மக்களின் மனிதாபிமானம் குற்றவாளிகளின் சார்பாக ஒரு நாளும் திரும்புவதும் இல்லை." - 'இதனால் பாஜக கூட்டணி தோல்வியடையும்' என்றெல்லாம் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார் Banu Gomes.
---

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற மூவருக்கும் தூக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகள் வழங்க முடியாது என்ற நிலையிலேயே இதைச் செய்துள்ளார்களே அல்லாமல் அவர்களை மன்னித்து விடுகிறோம் என்பதல்ல நீதிமன்றத்தின் நிலைப்பாடு.

கொலைக்கு மற்றொரு கொலை சமனாகிவிட முடியாது என்கிற நிலையில் இருந்தும் - தண்டனையின் நோக்கம் 'பலிக்கு பலி' அல்ல என்கிற உயந்த நிலையிலிருந்துமே நீதித்துறை செயல்பட வேண்டும். இந்த வகையில்தான், தமிழக மக்களின் மனிதாபிமான உணர்வு மரண தண்டனையை எதிர்க்கிறதே அன்றி - குற்றங்களுக்கு ஆதரவான மனநிலை அல்ல.

மேலும், தமிழகத்தில் பாஜக நிராகரிக்கப்படப் போவது - நிச்சயம் நடக்கப் போவதுதான். அவர்கள் அரசியல் படுகொலைகளுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதுடன், படுகொலை அரசியலில் திளைத்தவர்கள் என்பதாலுமே மக்கள் அவர்களை நிராகரிப்பார்களே அன்றி. மரண தண்டனைக்கு எதிரான தீர்ப்பினால் அல்ல.

உண்மையைச் சொல்லப்போனால், இந்த தீர்ப்புக்கு ஒரு காரணமாக அமைந்த மதிமுகவும், அந்த அணியோடு சேர்ந்து வீழப்போகிறது என்பதே நிதர்சனம்.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels