தேசியவாத வெற்றுக் கூச்சல்கள் ஒதுக்கி, போற்றுவோம் குடியரசை !

குடியரசு தின வாழ்த்துகள் ...

ஆனால், இந்த தினம் கொண்டாட்டத்துக்கு மட்டும் உரியதில்லை. நாம் ஒரு முழுமையான குடியரசில் வாழவில்லை, எனவே, இந்த தேசத்தை முழுமையாக்கும் கடமைகள் மிச்சமிருக்கின்றன, என்று உணர்ந்து - உறுதியேற்பதற்கான தினமாகும்.

அண்ணல் அம்பேத்கர் - அரசியல் அமைப்பு சட்ட வரைவை தாக்கல் செய்து முன்வைத்து பேசிய வார்த்தைகள் இன்னும் நமக்கு அதனை நினைவூட்டுகின்றன.

"முரண்பாடுகளின் வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம். ஆனால் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் நாம் சமத்துவமின்மையைப் பெற்றிருப்போம். அரசியலில், ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு மற்றும் ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு என்பதை அங்கீகரித்திருப்போம். ஆனால் நம் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில், நம் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக, ஒருமனிதனுக்கு ஒரு வாக்கு என்னும் விதியை அளித்திட மறுப்பது தொடரும்.

இத்தகைய முரண்பாடுகளுடனான வாழ்க்கையை இன்னும் எத்தனை காலத்திற்கு நீட்டிக்கப் போகிறோம்? மக்களின் சமூகப் பொருளாதார வாழ்க்கையில் சமத்துவத்தை மறுப்பதை இன்னும் எத்தனை காலத்திற்குத் தொடரப் போகிறோம்?

இவ்வாறு நாம் நீண்ட காலத்திற்கு மறுப்பது தொடருமானால், நம் அரசியல் ஜனநாயகமே பேரிடர்க்கு உள்ளாகும் நிலை உருவாகும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இம்முரண்பாட்டை நாம் ஒழித்திட வேண்டும். இல்லையேல், சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்ட மக்கள், இந்த அரசியல் நிர்ணயசபை கடுமையாக உழைத்து உருவாக்கிய இந்த அரசியல் ஜனநாயகக் கட்டமைப்பையே தகர்த்துவிடுவார்கள்."

நமது போராட்டம் மிச்சமிருப்பதை மறந்து, வெற்று தேசியவாதக் கூச்சல்களுக்கு இறையாகாமல், போற்றுவோம், குடியரசை.

‪#‎வாழ்த்துகள்‬

1 comment:

  1. குடியரசு தின வாழ்த்துகள் !

    ReplyDelete

Labels