இழிவைச் சுமக்கும் இந்தியப் பண்பாடு !

தன் மனக் குறைகளை பிறரின் இழிவாகப் பார்க்கும் நோய்தான் இங்கே வியாபித்திருக்கிறது.

#அரவாணி அல்லது திரு நங்கை - என்ற பிறப்பை ஒரு மனிதன் தானாக தேர்வு செய்வதில்லை. அரவாணியாக ஒருத்தருக்குள் ஏற்படும் மாற்றம் எந்த வகையிலும் பிறருக்கு துன்பம் செய்வது அல்ல. ஆனாலும், காரணமேயின்றி அவர்களை இழிவாகக் கருதும் குற்றத்தை பலரும் செய்துதான் வருகிறோம்.

அரசு கொடுக்கும் படிவத்தில், அநாகரிகமான திருநங்கைகள் ஏற்க மறுக்கும் குறியீட்டை பயன்படுத்தியிருப்பதை - என்னவென்று சொல்ல?

நேற்றுமுந்தினம் மதியம் பெண் சிசுக் கொலை தொடர்பான தொலைக்காட்சி விவாதம் நடந்தது, தஞ்சாவூரில் இருந்து ஒரு நண்பர் பேசினார், “என்ன இருந்தாலும் பெண்கள் நடந்துகொள்ளும் விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் ஆண்களை ஈர்க்கும் விதத்தில் உடை, நடைகளை அமைத்துக் கொள்ளும்போது. அவர்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது” என்றார்.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் - ஆதிக்க மனோபாவம்தான் காரணம் என்றுபடுகிறது. - ஆணுக்குள், பெண்ணின் கூறுகள் வந்தாலே அவர்களை இழிவாகக் கருதுவதும். இயல்பான ஆண், பெண் இனக் கவர்ச்சிக்கு கூட ’#பெண் உடலை’ குறையாகச் சொல்வதும்...

நம்மிடம் சரியான புரிதலும் கட்டுப்பாடும் இல்லாத போது - பிறர் மீது குற்றத்தை தள்ளிவிடுகிறோம். ‘முள் குத்தியது’ என்ற சொற்றொடரில் - முள்ளை மிதித்த உண்மை மறைந்துபோகிறது என்று சொல்வார்கள்.

# எத்தனை ஆண்டுகளாக - இந்த #இழிவுகளை நம் பண்பாடு சுமந்துகொண்டிருக்கப் போகிறது??

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels