என் தாத்தாவுக்கு ஒரு வாழ்த்துச் சொல்லுங்கள் !

என் தாத்தாவுக்கு வயது 92, கீழே விழுந்து உடலில் சிறு காயங்களுடன் இருந்தார். என்னைப் பார்த்ததும் எழுந்து அமர்ந்தவர், வெகுநேரம் பேசுவதை நிறுத்தவில்லை.

“பெரியார், ராஜாஜி, நேரு பார்த்திருக்கேன். ஜீவா பார்த்திருக்கேன். ராஜேந்திர பிரசாத்... யாரோடும் பேசினதில்ல.” காந்தியை பார்த்திருக்கீங்களா? என்று கேட்டதும் பாட்டியின் கண்கள் விரிந்தன, “நான் பார்த்திருக்கேன். 12 வயசுல என் மாமா அழைச்சிட்டு போவார்” என்று சொன்னார்.

13 வயதில் பாட்டிக்கு திருமணமாகிவிட்டது. அடுத்தடுத்து குழந்தைகள். வீடே அவருக்கு உலகம். சமயலில், பாட்டியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. இதை சிறு வயதிலேயே உணர்ந்திருந்தாலும், பாட்டியிடம் சொன்னபோது எனக்கு 14 வயதிருக்கும். அப்போதிருந்து பாட்டியின் சமயலோடு, அவரின் புன்னகையும் நான் வந்தால் தாராளமாகக் கிடைக்க ஆரம்பித்தது.

அங்கீகாரமும், பாராட்டும் ஒவ்வொரு மனிதனுக்கும் பற்றாக்குறையாய் இருக்கின்றன. உடலளவில் முதுமையடைந்தாலும், உணர்வளவில் குழந்தைகள்தான் ஏராளம்.

பேசிக் கொண்டிருக்கும்போது, “தன் ஓய்வூதியப் பணத்திலிருந்து ரூ.500 எடுத்துக் கொடுத்து. உத்தர்கண்ட் வெள்ள நிவாரணத்தில் சேர்த்துவிடு. என்னால் முடிந்தது” என்றார்.

தாத்தாவோடு மாற்றுக் கருத்துகள் இருந்திருக்கின்றன. கொள்கை அளவிலான முரண்கள். காலத்தின் வளர்ச்சிப் போக்கில், அவற்றில் பெரும்பகுதிகள் நொறுங்கிப்போயின. தாத்தா இந்த வயதில் தன் புது பிறப்பை அடைந்திருக்கிறார்.

#அன்பு என்று கொட்டு முரசே !

1 comment:

  1. உங்கள் தாத்தா நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Labels