தெகிடி - தொடங்கிவைக்கும் சில தேடல்கள் !

'ஒரு தனிப்பட்ட நபரின் தகவல்களை திரட்டி என்ன செய்துவிட முடியும்??' ... 'எந்தக் குற்றமும் செய்யாத போது உங்களுக்கு ஏன் அச்சம்?' அரசாங்கங்கள் ஒவ்வொரு குடிமகனின் தகவல்களையும் எந்த கட்டுப்பாடுமில்லாமல் திரட்டுவது குறித்த தகவலை எழுதியபோது வந்த கேள்விகள் இவை.

அமெரிக்கா, பிரிட்டன் வரிசையில் இந்தியாவும் உலகம் முழுவதுமுள்ள/தங்கள் சொந்த குடிமக்களதும் தனிநபர் தகவல்களை திரட்டுகின்றன. தொலைபேசி உரையாடல்கள், சேட்டிங் தகவல்கள், இ-மெயில்கள் என எல்லாமும் சேகரமாகின்றன. (இவை அரசுகளின் கைக்கு மட்டுமல்லாது, பல தனியார் நிறுவனங்களின் கைகளுக்கும் செல்கின்றன)

இப்படிப்பட்ட தகவல்களை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தைக் காட்டிக் கொடுக்கிறது 'தெகிடி'. படத்தின் நாயகன் ஒரு துப்பறியும் நிபுணர். அவர் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார் என்பதுதான் கதை.
----
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாகவும் படம் பேசுகிறது.

ஆனால், ஏதோ சில தனி நபர்கள் அல்ல - நிறுவனங்களே தங்கள் வாடிக்கையாளர்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள். குரூப் இன்சூரன்ஸ் பலன்கள் எவ்வாறு அபகரிக்கப்படுகின்றன என்பதையெல்லாம் 'சிக்கோ' என்ற ஆவணப்படம் இன்னும் தெளிவாகக் காட்டும். 

'தெகிடி' ஒரு சுவாரிசியமான கதைப் போக்கில், இப்படியான நல்ல தகவல்களை அறிந்துகொள்ளும் முயற்சியை தொடங்கி வைக்கிறது.

‪#‎A_feel_good_movie‬ ...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels