40 லட்சம் ஆதரவு அழைப்புகள்: நாமும் இணைவோம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார வன்கொடுமையை வீழ்த்துவோம் என்ற தலைப்பில்#சத்யமேவஜெயதே நிகழ்ச்சியில் அழைப்பு விடப்பட்டது. 40 லட்சம் பேர் அந்த அழைப்புக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியால் இதனைச் செய்ய முடியுமென்றால், நாம் ஒவ்வொருவரும் முயன்றால் அதுவொரு சமூக இயக்கமாகவே ஆகாதா?!

- பெண்களுக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்போம்.
(33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்க குரல்கொடுப்போம்)

- சமநீதியுடன் அரசமைப்பை வளர்த்தெடுப்போம்
(காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகளை பாலின பேதமற்றதாக்குவோம். சட்டங்களை அமலாக்குவதில் முனைப்பாக்குவோம்)

- தகுதியான ஆண் பிள்ளைகளை வளர்த்தெடுப்போம்.
(பெண்களை சக மனிதர்களாக கருதும் - மனிதர்களாக, புத்தி புகட்டுவோம்)

- சமூக உணர்வுள்ள படைப்புக்களை ஆதரிப்போம்.
(பெண்களை - கவர்ச்சி உடலாக மட்டும் முன்நிறுத்தும் திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் கதையாடல்களை எதிர்ப்போம்.

#மகளிர்_தினத்தில் உறுதியெடுப்போம்!

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels