இணையத்தால் சாதிக்க முடிந்த ஒரு சிறு வெற்றி!


Photo: ஒரு சிறு வெற்றி ...

நாம் மனித நேயம் குறித்து பேசுவதன் வெற்றி - செயலில், செயல்பாட்டில் வெளிப்பட வேண்டும் என்பது என் ஆதங்கம். குறிப்பாக, தீண்டாமை எதிர்ப்பு, தொழிலாளர் உரிமைகள், பெண் விடுதலை உள்ளிட்ட நோக்கில் பேசுகிறவர்கள் - தன் சொந்த வாழ்க்கையிலிருந்து மாற்றத்தைத் தொடங்க வேண்டும்.

துபாய், ஷார்ஜாவில் நாட்டில் பணியாற்றும் Sathish Joe - ஒரு பொறியாளர். அவருக்கு கீழ் 34 தொழிலாளர்கள் உள்ளனர். முதலில் நிறைய பேசுவோம், தொழிலாளர் உரிமைகள் குறித்து எதையாவது செய்ய வேண்டுமென அக்கறையோடு பேசுவார். ஆனால், அங்குள்ள நிலைமை அதற்கு உகந்ததில்லை என்று வருத்தமும் மேலிடும்.

இந்த நிலையில், பேசிப் பேசி சோர்வுற்று - தொடர்பிலிருந்தே காணாமல் போய்விட்டார். சில நாட்கள் முன் அவரிடமிருந்து இணைப்பில் உள்ள புகைப்படம் வந்தது. அவர் பணியாற்றும் பெயின்ட் நிறுவன தொழிலாளர்களுக்கு 'சுவாச' காப்பு கருவி ஏற்பாடு செய்ய நிறுவனத்தில் போராடி பெற்ற அனுபவத்தைச் சொன்னார்.

சதீஸ் குவாலிட்டி கண்ட்ரோலர் - பாதுகாப்பு அதிகாரி இன்னொருத்தர் இருக்கிறார். எனினும் இதுவரை பேப்பர் மாஸ்க் தான் கொடுத்திருக்கிறார்கள். இப்போது கொடுக்கப்பட்டுள்ள மாஸ்க் 600 டாலர்கள் வருமாம். முதலில் இந்த கோரிக்கையை வைத்தவுடன் வந்த எதிர்வினை என்ன தெரியுமா? 'உன் வேலை இது இல்லையே!' என்பதுதான். அவர், இல்லை இதுவும் என் வேலைதான் என விளக்கம் கொடுத்து - இந்த வசதியை பெற்றுக் கொடுத்ததை சொன்னார்.

இப்போது, அந்த தொழிலாளர்களை மாஸ்க் பயன்படுத்தி வேலைபார்க்க பழக்க வேண்டும். ஹெல்மெட் போடுவது போல, அசவுகரியத்தைப் பார்த்து பயன்படுத்தாமல் விட்டால் - உடல் நிலை மோசமாகிவிடும். இந்த வசதியும் காலாவதியாகிவிடுமே.

தொழிற்சங்கம் ஏதுமற்ற அந்த பன்நாட்டு நிறுவனத்தில் - தனக்குறிய வாய்ப்பை பயன்படுத்தி செய்த ஒரு சிறு பணியை பகிர்ந்துகொண்ட போது - நெகிழ்வாக இருந்தது. இன்னும், ஏராளமானவர்கள், சிறிது சிறுதாகவே மாற்றங்களை முன்னெடுத்தால் - இந்த பூமியைப் புரட்ட முடியாதா என்ன??

நம்மிலிருந்து தொடங்குவோம் ...

( Gunavathy Makizhnan மகிழ்நன் பா.ம என அனைவருக்கு வாழ்த்துகள்)
நாம் மனித நேயம் குறித்து பேசுவதன் வெற்றி - செயலில், செயல்பாட்டில் வெளிப்பட வேண்டும் என்பது என் ஆதங்கம். குறிப்பாக, தீண்டாமை எதிர்ப்பு, தொழிலாளர் உரிமைகள், பெண் விடுதலை உள்ளிட்ட நோக்கில் பேசுகிறவர்கள் - தன் சொந்த வாழ்க்கையிலிருந்து மாற்றத்தைத் தொடங்க வேண்டும்.

துபாய், ஷார்ஜாவில் நாட்டில் பணியாற்றும் Sathish Joe - ஒரு பொறியாளர். அவருக்கு கீழ் 34 தொழிலாளர்கள் உள்ளனர். முதலில் நிறைய பேசுவோம், தொழிலாளர் உரிமைகள் குறித்து எதையாவது செய்ய வேண்டுமென அக்கறையோடு பேசுவார். ஆனால், அங்குள்ள நிலைமை அதற்கு உகந்ததில்லை என்று வருத்தமும் மேலிடும்.

இந்த நிலையில், பேசிப் பேசி சோர்வுற்று - தொடர்பிலிருந்தே காணாமல் போய்விட்டார். சில நாட்கள் முன் அவரிடமிருந்து இணைப்பில் உள்ள புகைப்படம் வந்தது. அவர் பணியாற்றும் பெயின்ட் நிறுவன தொழிலாளர்களுக்கு 'சுவாச' காப்பு கருவி ஏற்பாடு செய்ய நிறுவனத்தில் போராடி பெற்ற அனுபவத்தைச் சொன்னார்.

சதீஸ் குவாலிட்டி கண்ட்ரோலர் - பாதுகாப்பு அதிகாரி இன்னொருத்தர் இருக்கிறார். எனினும் இதுவரை பேப்பர் மாஸ்க் தான் கொடுத்திருக்கிறார்கள். இப்போது கொடுக்கப்பட்டுள்ள மாஸ்க் 600 டாலர்கள் வருமாம். முதலில் இந்த கோரிக்கையை வைத்தவுடன் வந்த எதிர்வினை என்ன தெரியுமா? 'உன் வேலை இது இல்லையே!' என்பதுதான். அவர், இல்லை இதுவும் என் வேலைதான் என விளக்கம் கொடுத்து - இந்த வசதியை பெற்றுக் கொடுத்ததை சொன்னார்.

இந்தியாவிலும் பெரும்பாலான பெயின்ட் அப்ளிகேசன் நிறுவனங்களில் இத்தகைய பாதுகாப்பு இல்லாத நிலையில், தேவையான முன்னேற்றம்தான்.

இப்போது, அந்த தொழிலாளர்களை மாஸ்க் பயன்படுத்தி வேலைபார்க்க பழக்க வேண்டும். ஹெல்மெட் போடுவது போல, அசவுகரியத்தைப் பார்த்து பயன்படுத்தாமல் விட்டால் - உடல் நிலை மோசமாகிவிடும். இந்த வசதியும் காலாவதியாகிவிடுமே.

தொழிற்சங்கம் ஏதுமற்ற அந்த பன்நாட்டு நிறுவனத்தில் - தனக்குறிய வாய்ப்பை பயன்படுத்தி செய்த ஒரு சிறு பணியை பகிர்ந்துகொண்ட போது - நெகிழ்வாக இருந்தது. இன்னும், ஏராளமானவர்கள், சின்னச் சின்னதாய் மாற்றங்களை முன்னெடுத்தால் - இந்த பூமியைப் புரட்ட முடியாதா என்ன??

நம்மிலிருந்து தொடங்குவோம் ...


( Gunavathy Makizhnan மகிழ்நன் பா.ம என அனைவருக்கு வாழ்த்துகள்)

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels