பாலுமகேந்திரா காலமானார் ...

தமிழ்த் திரையுலகின் முற்போக்கான ஏராளமான படைப்பாளர்களுக்கு ஊக்கப் புள்ளியாக இருந்தவர் பாலுமகேந்திரா. அவர் காலமாகிய செய்தி, சற்று முன் வந்தது.

அவர் குறித்து Syamalam Kashyapan பகிர்ந்திருந்த ஒரு செய்தியை இங்கே நினைவூட்டலாம்.

"பாலு சார்! ஜப்பானிய திரைப்படம் ,பிரன்சு திரைப்படம், ஜெர்மனிய திரைப்படம் என்று இருக்கிறது. அவை அந்த நாடுகளின் கலாச்சார பண்பாடுகளை சித்தரிக்கின்றன. " இந்திய சினிமா" என்று இருக்கிறதா?

மென்மையாகப் பேசுபவர் அவர். கைப்பிடிச்சுவரிலிருந்து இறங்கி என் அருகில் வந்து என் தோளில் கைபோட்டு குலுக்கினார். என்னிடமிருந்து விலகி என் கண்களைப்பார்த்து "தமிழ் சினிமா இருக்கிறது.மலையாள சினிமா இருக்கிறது வங்காள .கன்னட மாராத்தி படங்கள் ,ஏன் இந்தி சினிமாவும் உள்ளது. இந்திய சினிமாவை நம் தான் உருவாக்க வேண்டும். " என்றார்.

அவர் காட்டிய பாதையில், இளவல்கள் வென்றுகாட்டுவார்கள். அதுவே அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

‪#‎அஞ்சலி‬ ‪#‎RIPBaluMahendra‬

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels