அந்தக் கண்ணீருக்கு நன்றி ...

நானும், ஒரு முதியவரும் தினமும் சந்திப்போம். அரசியல், மொழியியல் விவாதங்களில் தொடங்கிய எங்களின் பயணம் இப்போதெல்லாம் இசையில் வட்டமிட்டிருக்கிறது.

நானோ காதல் இளம் பருவத்தில் வாழ்கிறவன், அவரோ முற்றிய கட்டை. நாங்கள் இருவரும் சேர்ந்து பழையதும், புதியதுமாக பாடல்களைத் தேடி, கேட்டுக் கொண்டிருந்தோம்.

முதலில் அவரின் ரசனைக்குறிய பாடல் - பின்னர் என்னுடையது. எனக்கான முதல் வாய்ப்பில் 'இஸ்க்யா' என்ற இந்தி படத்திலிருந்து, தில்த்தோ பச்சா ஹே ஜி (என் இதயம் குழந்தைதானே!) http://www.youtube.com/watch?v=1Jp4wpMtAUE - என்ற பாடலை இசைத்தேன். நஸ்ருதீன் ஷா, ஒரு முதிய திருடராக நடித்திருக்கும் அந்தப் படத்தில், அவருக்கு எழும் காதல் மெல்லுணர்வை வெளிப்படுத்தும் பாடல் இது. நடிப்பும், இசையும் சேர்ந்து புரியாத மொழியையும் நமக்கு புரிய வைத்துவிடும்.

அடுத்து, அவர் நல்லதம்பி திரைப்படத்தில் கிந்தன் சரித்திரம் என்றொரு கதையாடலைச் சொன்னார். http://www.youtube.com/watch?v=-MEEeCkp6Aw
நான் அசந்துபோனேன்.

அடுத்து என் தருணம் வந்தது. http://www.youtube.com/watch?v=bFew8mgQJ9o நேரம் திரைப்படத்திலிருந்து, காதல் என்னுள்ளே வந்து என்ற பாடலை தேர்வு செய்தேன். அதற்குள் ஒரு தொலைபேசி அழைப்பு வர நான் அங்கிருந்து வெளியேற, அவர் பாடலை பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் சிவந்திருந்தன.

அவரின் இள வயதுக்கு பயணித்து திருபியிருக்க வேண்டும் அவர். நான் பார்ப்பதற்குள் அவசரமாக கண்களைத் துடைத்தார். அடுத்த பாடலுக்கு தாவத் தொடங்கினேன் நான்.

இசையும், கவிதைகளும் மட்டும் இல்லையென்றால் ...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels