சூது கவ்வும் : கருணாநிதி அறிக்கை ...

கலைஞர் கருணாநிதி - அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. எங்க தலைவரைப்போல சாணக்கியர் யாருமில்லை என்று திமுகவினரே பெருமைப்பட்டுக் கொள்வதை பார்த்திருக்கிறோம்.

அவர் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பாக ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதில் "மத்திய அரசு கவிழ்ந்துவிடக் கூடாது" என்பதற்காகத்தான் - மசோதாவை திமுக ஆதரித்து வாக்களித்ததென குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் என்ன நடந்தது?

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் மட்டும்தான் அரசு கவிழும். அப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென 'மம்தா பானர்ஜி' முயற்சி செய்தார்.

ஆனால், விழிப்புடன் செயல்பட்ட கம்யூனிஸ்டுகள் - 'சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு மசோதா மீது மட்டும் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம்' நடத்தலாம் என்று கூறினர். இதன் பொருள், வாக்கெடுப்பில் அரசு தோல்வியடைந்தால், அந்த மசோதாவை மட்டும் நிறைவேற்ற முடியாது.

இதனால், மம்தா - காங்கிரசுக்கு உதவியாக செய்ய நினைத்த 'நம்பிக்கையில்லா தீர்மான' அறிவிப்பு நீர்த்துப் போனது.

ஆனால், திமுகவோ, அறிக்கையில் எல்லாம் அன்னிய முதலீட்டை எதிர்த்துவிட்டு - பாராளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்தது.

உண்மை இப்படியிருக்க - கருணாநிதி தனக்கு ஒன்றுமே தெரியாது என்பதுபோல வெளியிட்டுள்ள அறிக்கை - சில்லரை வியாபாரிகள் கண்ணை திறந்திருக்கும்போதே, மண்ணைத் தூவும் வேலையாகும்.

தேர்தல் அரசியல்வாதிகளின் - சாணக்கியத்தனமெல்லாம் - அப்பாவி மக்களை ஏமாற்றத்தான் பயன்படுமென்றால், அதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?

#திமுக_தொண்டர்கள்தான்_சிந்திக்க_வேண்டும்...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels