மீண்டுமொரு வல்லுறவு ...

இந்த முறை நான் மிகுந்த சோர்வோடே இதனை எழுதுகிறேன். ஏற்கனவே, நான் சோர்வடைந்துவிட்டேன். ஆனாலும், இப்படிப்பட்ட பதிவுகளை எழுதுவதற்கான தேவை குறையுமென்று தோன்றவில்லை.

மேற்கு வங்கத்தில், பீம்புர் மாவட்டம் லாப்பூர் கிராமத்தில், ஒரு பழங்குடியினப் பெண் வேறு சாதி இளைஞரோடு பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அவர்கள் காதலித்துள்ளனர்.

இதில் தலையிட்ட சாதிப் பஞ்சாயத்தினர், அந்த பெண்ணிடம், ரூ.50 ஆயிரமும், இளைஞரிடம் ரூ.25 ஆயிரமும் அபராதம் செலுத்து, இல்லையெனில், கிராமத்து இளைஞர்கள் அப்பெண்ணை சீரழித்து விடுவார்கள் என்று மிரட்டியுள்ளார். இதைச் செய்தவர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்.

ஏழைப் பெண்ணால் அந்த தொகையை செலுத்த முடியாத நிலையில் - 13 பேர் கூட்டாக அவளை வல்லுறவு செய்துள்ளனர். இப்படிப்பட்ட வக்கிர மிருகங்கள் நாடு முழுவதும் மனிதர்களை தலைகுனிவுக்கு உள்ளாக்கிக் கொண்டேயிருக்கின்றனர்.

1) பெண்ணுக்கான சம அதிகாரம் (குடும்பம் தொடங்கி, பாராளுமன்றம் வரை ...)
2) இளைத்த அழகிய பெண்களை விட - வலுவான உதைக்கத் தெரிந்த மகளிரை வளர்த்தெடுப்பது
3) வல்லுறவு குற்றவாளிக்கு உடனடி தண்டனை - நடப்பிலுள்ள சட்டங்களை அமலாக்குவது ...
4) சாதி, பாலினப் பாகுபாடுகளுக்கு எதிரான மெளனம் கலைப்பது ...
5) பாலியல் பண்டமாக மட்டும் பெண்ணைப் பார்க்கும் ஆண்களின் காட்டுமிராண்டிச் சிந்தனையை மேம்படுத்துவது ...

என எந்த அடிப்படை மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் நாம் காலம் கடத்துகிறோம். நாம் என்றால் நாம் ஒவ்வொருவரும்தான்.

#இன்றே_தொடங்குவோம்...

1 comment:

  1. பெண்களை சக மனுஷியாய் பாவிக்க சொல்லி தன் வீட்டு ஆண்பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கனும்

    ReplyDelete

Labels