நேர்வு...



என் கிருக்கல்களைக்
கவிதைகளாகவும்
என் கவிதைகளை
காவியங்களாகவும்
தரம் உயர்த்தும் வல்லமை -உன்
குறுஞ்சிரிப்பில் அடங்கியுள்ளது !

கர்வம் கொள்ளாதே

கரிச்சுரங்கத்திலிருந்து
கசியும் வைரங்களைப் பிரிப்பதுபோல்
உதட்டோரத்தில்
புன்னகையை உதிர்த்தெடுக்கும்
ஆற்றல் - என்
கவிதைகளில் தான் வெளிப்படுகிறது.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels