லாரியோடு வரும் குழாய்ச் சண்டை ...

சாமானிய டைரி 1:

குழாயில் குடிநீர் வரும் வசதியுள்ள எங்கள் பகுதியில் இன்று ஒரு லாரி வந்திருந்தது. "இப்பவே, லாரில தண்ணி பிடிக்க வேண்டிய நிலை ஆகிடுச்சே" என்ற புலம்பல்கள் கேட்டன.

அவசரம் எல்லோரது கண்களிலும். பெரும்பாலான பெண்கள் அருகில் உள்ள பனியன் கம்பனியில் வேலை செய்கிறவர்கள்.

நீலவண்ண தண்ணீர் தொட்டிக்கு முன் வரிசையில் நின்றபடி குடங்களோடு காத்திருந்தார்கள். தண்ணீர் விநியோகம் தொடங்கியதும், சலசலப்பு அடங்கியது. அவரவர் வீடுகளுக்கு சென்று தண்ணீர் குடத்தை வைத்துவிட்டு, அடுத்த முறைக்காக மீண்டும் வரிசையில் நின்றார்கள்.எல்லோருக்கும் இரண்டு நடை தண்ணீர் கிடைக்கவிலை.

அவரவருக்கு கிடைத்த தண்ணீரோடு திருப்திப் பட்டுக்கொள்ள முடியாது. தண்ணீர் அத்தியாவிசயமாகிற்றே.

லாரி சிரியது, வரிசையில் நின்றவர்கள் அதிகம். ஏமாற்றத்தோடு திரும்பியவர்களில் சிலர் கவுன்சிலருக்கு அழைத்திருக்க வேண்டும். ஆனால், லாரி மீண்டும் வரவில்லை.

அடுத்தமுறை லாரியோடு வாய்ச் சண்டையும் வரலாம். பற்றாக்குறை அதைத்தான் உணர்த்தியது.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels