திமுக ஆதரவாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் ...

திமுக - அழகிரியை தற்காலிகமாக நீக்கியிருக்கிறது. தற்காலிகம்தான் என்றாலும் இதுவொரு நல்ல முடிவு. காலதாமதமே என்றாலும், எடுக்க வேண்டிய முடிவு.

அதிகாரப் போட்டிக்காக த.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டபோதும், தினகரன் அலுவலகத்தில் 3 ஊழியர்கள் கருகிச் செத்தபோதும் அவர்களுக்கு இத்தகைய முடிவை எடுக்க வேண்டும் நெருக்குதல் ஏற்பட்டிருக்கவில்லை. மாறாக, அழகிரிக்கு கட்சிப் பொருப்புகள் கொடுத்து கவுரவிக்கப்பட்டன.

உரத்துரை மந்திரியாக அவர் இருந்தபோதுதான், உர மானியங்கள் வெட்டப்பட்டன. விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் இதுபோன்ற கொள்கை முடிவுகளை ஏன் எடுத்தோம்? என்ற விளக்கக் கூட சொல்லத் தெரியாத, நிர்வாகியாக இருந்தார். ஆனாலும், அவர் அமைச்சராக நீடித்தார்.

திருமங்கலம் பார்முலாவை மட்டும் நம்பிய அழகிரி, அரசியலை எத்தனை எளிமையான விளக்கத்திற்குள் கொண்டு சென்றார்? என்பதும் இடைத்தேர்தல்களில் ஒரு விதமாகவும், பொதுத்தேர்தலில் வேறொரு விதமாகவும் மக்கள் பதிலடி கொடுத்ததும் மறக்க முடியாது.

ஆனால் அப்போதெல்லாம், கோபம் கொள்ளாத திமுக இப்போது 'தற்காலிக நீக்கத்தை' அறிவித்திருப்பதும். அதுவே, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளியென அய்யா வீரமணி சான்றிதழ் கொடுத்திருப்பதும். இதுவெல்லாம் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிகவை தாஜா செய்யும் வேலை மட்டும்தானோ? என்ற ஊகத்துக்கு இட்டுச் செல்வதை தவிர்க்க முடியவில்லை.

1 comment:

  1. இந்த திண்ணை பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி.

    ReplyDelete

Labels